Search

Parenting Tips : உங்கள் குழந்தை உங்களை மதிக்கவில்லையா? இத செய்ங்க, அப்புறம் பாருங்க மரியாதையை!

 

உங்கள் குழந்தை மிகவும் மரியாதையற்றவராக உள்ளாரா?

பெரும்பாலான பெற்றோருக்கு, மரியாதையற்ற குழந்தைகள் எப்போதும் சவாலானவர்கள்தான். அதீத துன்பங்களை தருபவர்கள். உறவில் மரியாதை என்பது, அடிப்படையான விஷயம். பெற்றோர் – குழந்தைகள் உறவில் மரியாதை கட்டாயம் இருக்க வேண்டும். 

குழந்தை எப்போது மரியாதையின்றி நடந்துகொண்டாலும், அதற்கு குடும்பத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் காரணமாக உள்ளன. இதற்கு புரிதல், பொறுமை, ஆக்கப்பூர்வமான உத்திகள் ஆகியவை தேவை. பெற்றோர் – குழந்தைகள் ஆரோக்கியமான உறவில், மரியாதை என்பது மிகவும் அவசியமான ஒன்று.

வீட்டில் நடைபெறும் உரையாடலில் பிரதிபலிக்கும்

வீட்டில் உரையாடல எவ்வாறு நடைபெறுகிறது என்று பாருங்கள். உரையாடலுக்கு திறந்தவெளி இருக்கிறதா? பரஸ்பர புரிதல் உள்ளதா? என்பதெல்லாம் கேள்விக்குறி. திறந்த மனதுடனான உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளை குறித்து எந்த முன்முடிவும் இல்லாத உரையாடல் எப்போதும், குழந்தைகளை திறந்த மனதுடன் பேசுவதற்கு இடமளிக்கும். பரஸ்பர மரியாதையை வளர்த்தெடுக்கும். 

தெளிவான மற்றும் பொறுப்புள்ள எல்லைகளை வகுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நட்புறவில் இருப்பது, அவர்களுக்கு உங்களை அவர்கள் விரும்பும் வகையில் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு கொடுத்துள்ள அதிகாரம் அல்ல. எல்லைகளை தொடர்ந்து ஏற்படுத்துவதில், குழந்தைகள் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. மேலும் விதிகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

மரியாதையான நடத்தைகளுக்கு உதாராணமாக இருங்கள்

குழந்தைகள் வீட்டில் உள்ள பழக்கவழங்களில் தாங்கள் உள்வாங்குவனவற்றையே கற்றுக்கொள்கிறார்கள். எனவே நீங்கள் உரையாடும்போதும், நடந்துகொள்ளும்போதும், மரியாதையான பழக்கவழக்கங்களையே பின்பற்றுங்கள். குழந்தைகளுக்கு உதாரணமாக இருங்கள். அனுதாபம் காட்டுங்கள், நன்றாக கவனியுங்கள், மற்றவர்கள் மற்றும் அவர்களுடனான உங்கள் உரையாடல்கள் எப்போதும் கருத்தில்கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகள் நடந்துகொள்ளும் விதத்தால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தி, அனுதாபம், அடுத்தவர்களின் மனநிலை ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். புரிதலை அதிகப்படுத்தும் உரையாடல்களை நிகழ்த்துங்கள். மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர்கள் நடக்க வேண்டும் என்பதை ஊக்குவியுங்கள்.

அதிகாரம் செய்யும் பழக்கத்தை தவிருங்கள்

ஒரு நடுநிலையான பெற்றோராக இருங்கள். அதிகம் அதிகாரம் எடுத்துக்கொண்டவர்களாகவும் இருக்கக்கூடாது. அதற்காக மிகுந்த இடமும் கொடுத்துவிடக்கூடாது. அதிக அதிகாரம் நிறைந்த பெற்றோராக இருப்பது, மனக்கசப்பு மற்றும் கலகத்தை ஏற்படுத்தும். மாறாக பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் அடிப்படையிலான உறவை வளர்த்தெடுங்கள்.

உங்கள் குழந்தைகளின் நடத்தை பிடிக்கவில்லையென்றாலும், அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து, அது புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவிபுரியுங்கள். மரியாதையான உரையாடல்கள் அதிகரிப்பதற்கு வழியமைத்துகொடுக்க வேண்டும்.

பிரச்னைகளின் வேரை ஆராயுங்கள்

உங்கள் குழந்தையின் மரியாதையற்ற நடவடிக்கைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ளுங்கள். அது விரக்தி, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், அவர்கள் வயதையொத்த நண்பர்களின் பாதிப்பு மற்றும் கேட்கப்படாத உணர்வுகளே அதற்கான காரணங்களாக இருந்திருக்கலாம். எனவே பிரச்னைக்கான காரணம் என்ன என்பதை நீங்கள் முழுமையாக அறிந்துகொண்டால், நீங்கள் அந்த பிரச்னை களையும் வழியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

மரியாதை குறித்த உரையாடல்களை அமைதியாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் அவர்களுக்கு எடுத்து கூறுங்கள். உங்கள் குழந்தைகளை இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடுத்துங்கள். அப்போதுதான் அவர்களின் தரப்பில் உள்ள பிரச்னைகளை புரிந்துகொண்டு நீங்கள் இருவரும் சேர்ந்து தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். 

ஒரு மரியாதையான பெற்றோர் மற்றும் குழந்தை உறவை வளர்ப்பதற்கு நம்பிக்கையான சூழலை உருவாக்குவது, அனுதாபம் கற்றுக்கொடுப்பது, ஆரோக்கியமான மற்றும் மரியாதை நிறைந்த உரையாடல்களை குடும்பம் மற்றும் குடும்பம் கடந்து உருவாக்குவேண்டும். இவற்றையெல்லாம் செய்யும்போதே குழந்தைகளிடம் மரியாதை, சுயமரியாதை, தன்னப்பிக்கை, தன்னடக்கம் உள்ளிட்ட பல்வேறு நற்குணங்களும் வளர்கின்றன.


🔻 🔻 🔻 

Jeera Water : இந்த ஒரு பானம் போதும் தலை முதல் கால் வரை பலன் பல!

 சீரகத்தண்ணீரை குடிப்பது, உங்கள் உடலுக்கு செரிமானம் முதல் வளர்சிதை மாற்றம் வரை பல்வேறு பலன்களை கொடுக்கிறது. சீரகத்தண்ணீர் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய சமையலறையில் சமையலில் சுவை மற்றும் மணம் இரண்டையும் அதிகரிக்க பயன்படுத்தும் ஒரு மசாலாப்பொருள் சீரகம். அது மட்டுமின்றி இந்திய பாராம்பரிய மருத்துவங்களில் மருந்தாகப்பயன்படுகிறது. அத்தனை ஆரோக்கியம் நிறைந்தது. 

சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் கே ஆகியவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. அது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் உள்ள கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

மெக்னீசிய சத்து தசைகள் மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அழற்சி மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைப்பில் உதவுகிறது.  

உணவு செரிக்க உதவுகிறது

சீரகத்தண்ணீர், செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களை உற்பத்தி செய்கிறது. இதனால் செரிமானம் எளிதாகி அஜீரணக்கோளாறு குறைகிறது.

வயிறு உப்புச பிரச்னைகளுக்கு தீர்வாகிறது

இதில் உள்ள வயிறு உப்புசத்தை நீக்ககூடிய சக்திகள் வாயு மற்றும் உப்புசத்தை நீக்க உதவுகின்றன. இதனால் செரிமானம் எளிதாகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

சீரகத்தண்ணீர் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, கொழுப்பை எரித்து, உடல் எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சீரகத்தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்க்கு எதிராக உடல் போராடுவதற்கு உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சரும அலர்ஜி ஏற்படுவதை குறைக்கிறது. சீரகத்தண்ணீரை வழக்கமாக குடித்துக்கொண்டு வரும்போது, கழிவு நீக்கத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக பராமரிக்க உதவுகிறது.

மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது

சீரகத்தண்ணீரில் உள்ள கிருமிகளுக்கு எதிரான பொருட்கள் சுவாசம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. தொண்டை கரகரப்பை சரிசெய்கிறது.

நினைவாற்றலை ஊக்கப்படுத்துகிறது

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நரம்பு மண்டலத்தை சீராக்கி, நினைவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

உடலில் கழிவு நீக்கத்தை ஊக்குவிக்கிறது

சீரகத்தண்ணீர் டையூரெடிக்காக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக கழிவு வெளியேற்றம் செய்துவிடுகிறது.

மாதவிடால் வலிகளை போக்குகிறது

மாதவிடாயால் ஏற்படும், இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவற்றை போக்கிறது. மாதவிடாயால் ஏற்படும் உடல் அசௌகரியங்களை தடுக்கிறது.

சீரகத்தண்ணீரை எப்படி பருக வேண்டும்?

சீரகத்தண்ணீரை தயார் செய்வதற்கு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு ஊறவைக்க வேண்டும். அதை வடிகட்டி அடுத்த நாள் காலையில் பருகவேண்டும். பெரும்பாலும், தண்ணீரை வெறும் வயிற்றில் பருவது நல்லது. அப்போதுதான் முழு பலன் கிடைக்கும்.

🔻 🔻 🔻 

NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.99750/-

 

NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.99750/-

தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை ஆனது Grade A (Assistant Manager) & Grade B (Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 25.11.2023 முதல் 24.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPS Trust காலிப்பணியிடங்கள்:

1. Grade A (Assistant Manager) – General – 01 பணியிடம்
2. Grade A (Assistant Manager) – Risk Management – 01 பணியிடம்
3. Grade A (Assistant Manager) – Investment and Research – 01 பணியிடம்
4. Grade B (Manager) – Risk Management – 01 பணியிடம்
5. Grade B (Manager) – Finance & Accounts – 01 பணியிடம்

என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.11.2023தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree in Business administration/ Associate Chartered Accountant (ACA) or Fellow Chartered Accountant (FCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NPS Trust சம்பள விவரம்:

1. Grade A (Assistant Manager) – General – Rs.44500 – 89150/-
2. Grade A (Assistant Manager) – Risk Management – Rs.44500 – 89150/-
3. Grade A (Assistant Manager) – Investment and Research – Rs.44500 – 89150/-
4. Grade B (Manager) – Risk Management – Rs.55200 – 99750/-
5. Grade B (Manager) – Finance & Accounts – Rs.55200 – 99750/-

தேர்வு செயல் முறை:

1. Phase I (On-Line Examination)
2. Phase II (On-Line Examination) & Phase III (Interview)

விண்ணப்ப கட்டணம்:
  • Unreserved, EWS & OBC – ரூ.1000/-
  • SC/ST/PwBD/Women – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 25.11.2023 முதல் https://www.npstrust.org.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள NPS அறக்கட்டளை இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 24.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
Apply Online



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

 

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கு என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech/ Graduate in any discipline / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.11.2023 தேதியின் படி, இப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து இப்பணிக்கு 19.11.2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 27.11.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அவகாசமும் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf 

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

 

மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Young Professional II பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc. /B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Young Professional II பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc. /B.Tech in agricultural science / B.V.Sc. OR M.Sc/M.Tech/M.V.Sc etc in any branch of science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

நாகப்பட்டின மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27,804/-

 

நாகப்பட்டின மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27,804/-

நாகப்பட்டின மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Legal / Probation Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal / Probation Officer) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Legal / Probation Officer கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BL, LLB Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Legal / Probation Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Legal / Probation Officer ஊதியம்:

Legal / Probation Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.27,804/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Legal / Probation Officer தேர்வு முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Legal / Probation Officer விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

NaBFID நிறுவனத்தில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

 

NaBFID நிறுவனத்தில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

Senior Analyst பணிக்கு என National Bank for Financing Infrastructure and Development (NaBFID) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NaBFID காலிப்பணியிடங்கள்:

NaBFID நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Analyst பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Analyst கல்வி விவரம்:

MBA, CA, CFA, ICWA, CMA, Post Graduate Degree, Post Graduate Diploma, MCA, ME, M.Tech, LLM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Senior Analyst அனுபவ விவரம்:

Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 04 ஆண்டுகள் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Senior Analyst வயது விவரம்:

01.10.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Analyst ஊதிய விவரம்:

இந்த NaBFID நிறுவன பணிக்கு தேர்வு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NaBFID தேர்வு செய்யும் முறை:

Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Shortlist ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NaBFID விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

🔻🔻🔻

NLC India நிறுவனத்தில் காத்திருக்கும் Part Time வேலை – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான நல்ல சான்ஸ்!

 

NLC India நிறுவனத்தில் காத்திருக்கும் Part Time வேலை – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான நல்ல சான்ஸ்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Advisor to Director (Power) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NLC India காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Associate Advisor to Director (Power) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே NLC India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Associate Advisor to Director கல்வி விவரம்:

Associate Advisor to Director (Power) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Associate Advisor to Director வயது விவரம்:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Associate Advisor to Director ஊதிய விவரம்:

Associate Advisor to Director (Power) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் NLC India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

NLC India தேர்வு செய்யும் முறை:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NLC India விண்ணப்பிக்கும் வழிமுறை:

Associate Advisor to Director (Power) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 04.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Accenture நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 

Accenture நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Actimize Application Developer பணிக்கு என Accenture நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Accenture பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் Actimize Application Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Actimize Application Developer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவராக இருக்கலாம்.

Actimize Application Developer முன்னனுபவம்:

Actimize Application Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Actimize Application Developer பிற தகுதி:
  • JAVA
  • SQL
  • PL SQL
  • Accenture தேர்வு செய்யும் விதம்:

    இந்த Accenture நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு, கலந்தாய்வு, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Accenture விண்ணப்பிக்கும் விதம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    Download Notification & Application Link


🔻🔻🔻

Wipro நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

 

Wipro நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

Wipro நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Processor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Senior Processor பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Processor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Processor கல்வி:

Senior Processor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Senior Processor பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Wipro ஊதியம்:

Senior Processor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

🔻🔻🔻

Day 13 | Chemistry | Acids, Bases & Salts | Part 2

 Day 13 | Chemistry | Acids, Bases & Salts | Part 2

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 13 | Moderates & Extremist Era | INM

 Day 13 | Moderates & Extremist Era | INM

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 13 | தமிழ் அறிஞர்கள் | நாட்டுப்புறக் கலைகள்

 Day 13 | தமிழ் அறிஞர்கள் | நாட்டுப்புறக் கலைகள் 

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group