Search

WII இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,51,100/- ஊதியம்!

 

WII இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,51,100/- ஊதியம்!

இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Grade – II, Section Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

WII மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (WII) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Grade II – 03 பணியிடங்கள்
  • Section Officer – 02 பணியிடங்கள்
WII பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 02 / 06 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

WII வயது வரம்பு:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

WII ஊதியம்:
  • Assistant Grade II பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்
  • Section Officer பணிக்கு ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
WII தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview (Deputation விதிமுறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WII விண்ணப்பிக்கும் முறை:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Assistant Grade II – 15.12.2023
  • Section Officer – 30.12.2023

Download Notification & Application Form PDF 1


🔻🔻🔻

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது Team Leader பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RITES காலிப்பணியிடங்கள்:

Team Leader பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

25.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Leader கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate in Civil Engineering or Graduate in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 25.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

மத்திய அரசின் Spices Board-ல் நேர்காணல் – Diploma / Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 

மத்திய அரசின் Spices Board-ல் நேர்காணல் – Diploma / Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் System Support Engineer Trainee பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Spices Board பணியிடங்கள்:

Spices Board-ல் காலியாக உள்ள System Support Engineer Trainee பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

System Support Engineer Trainee கல்வி விவரம்:

System Support Engineer Trainee பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, BCA, MCA, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

System Support Engineer Trainee வயது விவரம்:

17.12.2023 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

System Support Engineer Trainee ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.19,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு செய்யும் முறை:

System Support Engineer Trainee பணிக்கு பொருத்தமான நபர்கள் 17.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Indigo நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

Indigo நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant – Finance மற்றும் Assistant Manager – Finance (Accounts Payable) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

Consultant – Finance மற்றும் Assistant Manager – Finance (Accounts Payable) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf


🔻🔻🔻

டிகிரி முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு!

 

டிகிரி முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு!

Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch பணிக்கு என HDFC வங்கியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

HDFC Bank காலிப்பணியிடங்கள்:

HDFC வங்கியில் Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Sales Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree, Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Sales Officer முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 0 முதல் 03 வருடங்கள் வரை பணி புரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Sales Officer மாத சம்பளம்:

இந்த HDFC வங்கி பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

HDFC Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த HDFC வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

Health Tips: குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லதா?

 வேர்க்கடலை பருப்பில் சராசரியாக 48% எண்ணெய் சத்தம் 26 சதவிகிதம் புரதச்சத்தும் 17.1% மாவுச்சத்தும் இரண்டு சதவீதம் நார்ச்சத்தும் இரண்டு சதவீதம் சாம்பல் சத்தும் ஒரு சதவீதம் அல்லது அதற்கு குறைவாக வைட்டமின்கள் தாது பொருட்கள் உள்ளன. உலக சுகாதார அமைப்புகள் நாள் ஒன்றுக்கு ஒரு அவுன்ஸ் அதாவது 28.3 கிராம் பருப்புகளை உட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது

தோல் ஆரோக்கியம் முதல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது வரை, வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் இந்த வேர்க்கடலையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

குளிர்காலத்தில் உங்கள் பசியைத் தணிக்க வேர்க்கடலையை சரியான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகப் பயன்படுத்தலாம். வேர்க்கடலையில் அற்புதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பசியின்மை மேலாண்மை: 

வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு ஹார்மோன்களைத் தூண்டுகிறது. அதுவே உங்களுக்கு ஒரு வகையில் திருப்தியைத் தருகிறது. இது உங்கள் பசியை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.

ஆரோக்கியமான சருமம்: 

வேர்க்கடலையில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் நிறைந்துள்ளது. சருமம் வறண்டு இருப்பதால் குளிர்காலத்தில் இதனை உட்கொள்வது மிகவும் நல்லது. வேர்க்கடலை அனைத்து வகையான தோல் நோய்களிலிருந்தும் உங்களை விலக்கி வைக்கிறது. தோல் சுருக்கம், ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை குறைப்பதில் வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்க்கான பரிகாரம்: 

வேர்க்கடலையில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், புரோஸ்டேட் கட்டிகளின் வளர்ச்சியை 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கும். இதனால் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட வேர்க்கடலை புற்றுநோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.

குழந்தைகளின் ஆரோக்கியம்: 

வேர்க்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை கொடுக்க வேண்டும். இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த உணவு: 

ஃபோலேட் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும், இது கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஃபோலேட் நிறைந்த வேர்க்கடலை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவாகும்.


தொப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா? முயற்சி செய்தும் குறைக்க முடியலையா? இனி கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்!

 தொப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா? முயற்சி செய்தும் பருக்களை குறைக்க முடியவில்லையா? அப்படியானால், தினமும் காலையில் சில விதிகளைப் பின்பற்றினால், அதிகப்படியான கொழுப்பு வேகமாக குறையும். கொழுப்பு கரைந்தால், எளிதில் இறுக்கமான வயிறு கிடைக்கும்.

காலையில் எழுந்தவுடன் உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். எனவே நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.விரும்பினால் அதில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வழக்கமான உடற்பயிற்சியானது முகப்பருக்கள் வருவதைக் குறைத்து உடலை சுத்தமாக வைத்திருக்கும். எனவே காலையில் எழுந்து தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

எழுந்து தியானம் செய். தியானம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தால், கொழுப்பு எளிதில் அதிகரிக்கிறது. எனவே தியானம் மிகவும் முக்கியமானது.

அதிக புரதச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், புரோட்டீன் ஸ்மூத்திஸ், டோஃபு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, வைட்டமின் டி எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனவே நீங்கள் வைட்டமின் டி எடுத்துக் கொள்ளலாம். விடிய காலை சூரியனில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன., 

🔻 🔻 🔻 

Group 4 Tamil Study Materials 2023

 Group 4 Tamil Study Materials 2023



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 19 | Resources Sharing | Indian Economy - 6

 Day 19 | Resources Sharing | Indian Economy - 6 

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 19 | Bill, Motion, Parlimentary Commities | Indian Polity

 Day 19 | Bill, Motion, Parlimentary Commities | Indian Polity

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 19 | பொதுத்தமிழ் சொல் இலக்கணம் - இலக்கியவகைச் சொற்கள்

 Day 19 | பொதுத்தமிழ் சொல் இலக்கணம் - இலக்கியவகைச் சொற்கள்

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சித்தா பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட காலிப்பணியிடங்கள்:

பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உதவியாளர் சம்பள விவரம்:

ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பரான வேலை – உடனே அப்ளே பண்ணுங்க!

 

சென்னை Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பரான வேலை – உடனே அப்ளே பண்ணுங்க!

தனியார் இ-வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Amazon-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. BRM Quality Manager பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Amazon பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, BRM Quality Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

BRM Quality Manager கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Amazon அனுபவ விவரம்:

BRM Quality Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BRM Quality Manager பணியமர்த்தப்படும் இடம்:

இந்த Amazon நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Amazon தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BRM Quality Manager விண்ணப்பிக்கும் வழிமுறை:

BRM Quality Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத்துறையில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்!

 

தமிழக வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத்துறையில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநரகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Marketing Specialist, FPC Execution and Training Specialist ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 06 மாதங்கள் முதல் 02 ஆண்டு கால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:
  • Marketing Specialist – 01 பணியிடம்
  • FPC Execution and Training Specialist – 01 பணியிடம்
கல்வி:

இப்பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, MSW, M.Sc, MBA, MS ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வயது வரம்பு:

இந்த தமிழக வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

மாத சம்பளம்:
  • FPC Execution and Training Specialist பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • Marketing Specialist பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தமிழக வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link 1

Download Notification Link 2


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news