Search

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

 

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

குறுகிய கால இராணுவ சேவை (SSC) பிரிவின் கீழ் வரும் Military Nursing Service (Nurse) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய இராணுவம் (Indian Army) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Nursing தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 11.12.2023 அன்று முதல் பெறப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய இராணுவ காலியிடங்கள்:

Military Nursing Service (Nurse) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய இராணுவத்தில் காலியாக உள்ளது.

Nurse கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Nurse வயது விவரம்:
  • இந்த இராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Nurse ஊதிய விவரம்:

Nursing பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு MNS விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Indian Army தேர்வு செய்யும் முறை:
  1. Computer Based Examination
  2. Interview
  3. Medical Examination
Indian Army விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 11.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

TN TRB ஆசிரியர் பணிக்கு 2580+ காலியிடங்கள் – சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!

 

TN TRB ஆசிரியர் பணிக்கு 2580+ காலியிடங்கள் – சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TNTRB) ஆனது Graduate Teacher / Block Resource Teacher Educator பணிகளுக்கு என 2023-2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள TN TRB GT / BRTE 2023 தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.12.2023 அன்றில் இருந்து 13.12.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கால நீட்டிப்பானது மிக்ஜாம் புயல் மற்றும் மழையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாயத்தின் படி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வு விண்ணப்பிக்க தேவையான முழு தகவலும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் Graduate Teacher மற்றும் Block Resource Teacher Educator பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2582 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TN TRB GT / BRTE 2023 தேர்வு விவரங்கள்:

Graduate Degree + Diploma, Graduate Degree + B.Ed, 12ம் வகுப்பு + B.El.Ed, 12ம் வகுப்பு + BA / B.Sc.Ed / B.A.Ed ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கு 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்ச வயதானது 53 வயது முதல் 58 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் முறை:
  1. Compulsory Tamil Language Eligibility Test
  2. Written Examination
  3. Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

 

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது TNUSRB SI 2023 தேர்வின் மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNUSRB SI 2023 நேர்காணல்:

TNUSRB ஆணையத்தின் வலைதள பக்கத்தில் 2023ம் ஆண்டில் Sub Inspector பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 05.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் நிலையான எழுத்து தேர்வானது 26.08.2023, 27.08.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 07.11.2023 அன்று நடைபெற்ற இரண்டாம் நிலையான Document Verification / Physical Test மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தேர்வர்கள் இன்று முதல் (06.12.2023) பெற்று கொள்ளலாம். இப்பட்டியலை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது விரைவில் TNUSRB ஆணையம் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download TNUSRB Viva Voice List 1
Download TNUSRB Viva Voice List 2
Download TNUSRB Viva Voice List 3
Download TNUSRB Viva Voice List 4
Download TNUSRB Viva Voice List 5
Download TNUSRB Viva Voice List 6

Wipro நிறுவனத்தில் Developer ஆக வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 

Wipro நிறுவனத்தில் Developer ஆக வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Developer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Developer ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Developer தேர்வு முறை:

Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் முறை:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link

🔻🔻🔻

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ஒரு நாளுக்கு ரூ.1,000/- ஊதியம்!

 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ஒரு நாளுக்கு ரூ.1,000/- ஊதியம்!

Guest Faculty பணிக்கு என புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 14.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுவைப் பல்கலைக்கழக காலியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி:

Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் UGC விதிமுறைக்குட்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Guest Faculty வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest Faculty மாத சம்பளம்:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு நாளுக்கு ரூ.1000/- விதம் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு செய்யும் விதம்:

Guest Faculty பணிக்கு தகுதியான நபர்கள் 18.12.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை pucc.pdy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link 1
Download Notification Link 2


🔻🔻🔻

சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

 

சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை Tidel Park-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Executive Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Chennai Tidel Park காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive Director பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே Chennai Tidel Park-ல் காலியாக உள்ளது.

Executive Director கல்வி:

Executive Director பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree அல்லது MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Executive Director வயது:

01.07.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 40 வயது எனவும், அதிகபட்சம் 50 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Executive Director மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Executive Director தேர்வு செய்யும் விதம்:

Executive Director பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Director விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (13.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form Link

Day 24 | Time & Work | Aptitude & Mental Ability

 Day 24 | Time & Work | Aptitude & Mental Ability 

Click here to download pdf file





🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group 

Day 24 | Gandhian Era - 2 | Indian National Movement

 Day 24 | Gandhian Era - 2 | Indian National Movement

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 24 | தமிழ் அறிஞர்கள் | தமிழ் மொழியின் சிறப்பு

Day 24 | தமிழ் அறிஞர்கள் | தமிழ் மொழியின் சிறப்பு

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 23 | Gandhian Era - 1 | Indian National Movement

 Day 23 | Gandhian Era - 1 | Indian National Movement 

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 23 | பொதுத்தமிழ் | தமிழ் அறிஞர்கள் | கலைகள் |

 Day 23 | பொதுத்தமிழ் | தமிழ் அறிஞர்கள் | கலைகள் |

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

குளிர்காலத்துல உங்க உடல் எடையை சீக்கிரம் குறைக்க... 'இந்த' 6 வேர் காய்கறிகள மறக்காம சாப்பிடுங்க..!

 வ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது.

அந்த வகையில், குளிர்காலம் வந்தவுடன், நமது உணவுப் பழக்கம் மாறுகிறது. அதிகமான மக்கள் தங்கள் சூடான உணவையும், தங்களை சூடாக வைத்திருக்கும் உணவையும் எடுத்துக்கொள்கிறார்கள். அத்துடன் சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கவும் உதவும் உணவுகளை சேர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி நம்மை எளிதில் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாக்குகிறது. எனவே, இந்த பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க, இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குளிர்கால பருவத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய சில வேர்க் காய்கறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கேரட்

குளிர்காலம் வந்தவுடன், சிவப்பு கேரட் சந்தை எங்கும் காணப்படுகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், வைட்டமின் ஏ நிறைந்த ஆதாரமாக உள்ளது. அதனால்தான் இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நல்ல அளவு நார்ச்சத்தும் இதில் உள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்துகிறது.

இஞ்சி

குளிர்காலத்தில் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற அதன் கலவைகள் செரிமான நொதிகளைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. கூடுதலாக, அதன் தெர்மோஜெனிக் தன்மை உடல் வெப்பநிலையை குறைக்கிறது. இதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடு அதிகரிக்கிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இனிப்பு உருளைக்கிழங்கு உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்ல. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கு குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இந்த இயற்கையான இனிப்பு காய்கறியில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது. இது இன்சுலின் எதிர்ப்பின் சாத்தியத்தையும் குறைக்கும்.

டர்னிப்

டர்னிப் அல்லது ஷால்கம் என்பது குளிர்காலத்தில் காய்கறி சந்தைகளில் நாம் காணும் மிகவும் பிரபலமான வேர் காய்கறிகளில் ஒன்றாகும். இது நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தில் நிறைந்திருப்பதாக அறியப்படுகிறது.

குறிப்பாக வைட்டமின் சி, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மிகவும் சீரான வளர்சிதை மாற்ற விகிதத்திற்கும் பங்களிக்கும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் போன்ற கலவைகள் உணவை உடைக்கும் நொதிகளைத் தூண்டி செரிமானத்திற்கு உதவுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை ஆதரிக்கவும் உதவும்.

பூண்டு

இந்திய உணவின் இன்றியமையாத பாகமான பூண்டு, உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டில் அல்லிசின் மற்றும் பிற கந்தக சேர்மங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உள்ளன.

இந்த கலவைகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன. மேலும், இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.


🔻 🔻 🔻 

இதை தெரிஞ்சிக்கோங்க..! பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர..

 னைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது.

பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.

அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயைத் தண்ணீருடன் கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம்.உங்கள் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கச் சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.

ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.

சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.


சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பனங்கற்கண்டே மேலானது.

கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.

தினந்தோறும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும்.உங்களின் உடல் சோர்வு நீங்கவும் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் அரை தேக்கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகளை நீங்கத் திரும்பப் பெறுவதுடன் உடல் மற்றும் மனதின் சுருசுருப்பை அதிகரிக்கிறது.

ஞாபக சக்தி

மூளையின் உயிரணுக்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கு நியாபாகத் திறன் அதிகம் இருக்கின்றது.நியாபாகத் திறனை மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதம் பருப்பு மற்றும் சீரகம் இவற்றைச் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் கண் பார்வை திறன் மேம்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று உடல் நலத்தை பாதுகாப்பதில் உடலில் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்கவேண்டியது அவசியம்.உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டுடன் சேர்த்து பாதம், மிளகு தூள் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

சிறுநீரக கல்

சுண்ணாம்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இரண்டு தேக்கரண்டி வெங்காயச் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் சுலபத்தில் கரையும் மற்றும் சிறுநீரக மேம்படும் அதிகரிக்கும்.



🔻 🔻 🔻 

இது தெரியுமா ? இஞ்சி சுக்கு.. இது இரண்டும் இருந்தால் வாழ்நாள் நீளும்..!

 இஞ்சி+ வெந்நீர் காம்போ

ஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால், கீல்வாதம், வயிற்று பிடிப்பு, முதுகு வலி, மூச்சுக்குழாய் அழற்சி, கழுத்து விறைப்பு, சீதளம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

நம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தீகரிக்கும் பணியை இஞ்சி மிகவும் சிறப்பாக செய்கிறது. நமது அன்றாட உணவில் இஞ்சியை அதிகமாக சேர்த்து வந்தால் இரத்தத்தில் தொற்றுகள் ஏற்படாது, இரத்த ஓட்டம் அதிகமாகும்.

உடல் எடை குறைப்பில் இஞ்சி
இஞ்சியில் இருக்கும் நார்சத்து, பசியை அடக்குகிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இஞ்சி சரியான உணவாக இருக்கின்றது.

பல்வேறு பிரச்சனைகளை போக்கும் இஞ்சி

இயற்கை வைத்தியத்தில் இஞ்சி ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். நரம்புகளை பலப்படுத்தி, தலைவலி, பித்தம், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்த்து உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கி, தசைகளை உறுதிபடுத்துகிறது. தினசரி சுத்தமான இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கேன்சர் செல்கள் அழிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

சர்க்கரைக்கு மூலிகை மருந்தாய் மாறும் இஞ்சி
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இஞ்சி சாற்றுடன் வெங்காய சாற்றையும் சேர்ந்து குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தலாம். இஞ்சி சாற்றோடு தேன் கலந்து குடித்து வர செரிமான மண்டலம் சீராவதுடன், வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறையும். ஏற்கனவே கூறியது மாதிரி இது உடல் பருமன் குறைய நல்ல தீர்வு. அதுவும் இஞ்சியோடு புதினாவை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம், பித்தம் நீங்கும், வாயில் ஏற்படும் துர்நாற்றமும் அடங்கும்.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் இஞ்சி

வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதில் இஞ்சி மருந்தாகப் பயன்படுகிறது. லேசான வயிற்றுவலி அல்லது குடல்புண் எதுவாக இருந்தாலும், இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வயிற்றில் காணப்படும் எச்.பைலோரி பாக்டீரியா வயிற்றில் புண்களை உண்டாக்குகிறது, இஞ்சியை உட்கொண்டு வந்தால், அல்சரில் அதிக நிவாரணம் கிடைக்கும்.

மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கொடுக்கும் இஞ்சி
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இஞ்சியின் வழக்கமான நுகர்வு கீல்வாதத்தினால் ஏற்படும் பயங்கரமான வலியை சமாளிக்க உதவுகிறது. இதனுடன், நமது எலும்புகளை வலுப்படுத்தும் சில கூறுகளும் இஞ்சியில் காணப்படுகின்றன.

அல்சைமர் நோயில் நன்மை பயக்கும் இஞ்சி

அல்சைமர் போன்ற தீவிர நோயைக் குணப்படுத்த இஞ்சி பெரிதும் உதவுகிறது, இஞ்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அல்சைமர் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம்
பெண்கள் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பீரியட்ஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற, சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம். மாதவிடாயின் போது தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெற, இஞ்சி தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்தால், அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


🔻 🔻 🔻 

எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!

 மது உடல் ஆரோக்கியமாக இருக்க, குடல்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நமது குடல்கள் நேரடியாக மூளையுடன் தொடர்புடையவை.

நமது குடல் ஆரோக்கியமற்றதாக இருந்தால், மூளையும் வேலை செய்வதை நிறுத்தி விடும். இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம் மோசமான உணவு பழக்கம். இதன் காரணமாக அமிலத்தன்மை, வலி, எரியும் உணர்வு மற்றும் பல வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நம் குடலுக்கு ஜீரணிக்க மிகவும் கடினமாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். கட்டுப்பாடு ஏதும் இல்லாமல், கண்டதை உண்ணும் போது, குடல்கள் சேதமடையத் தொடங்குகின்றன. குடலை உட்புறமாக சேதப்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் அத்தகைய சில உணவுகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது நமது குடலுக்கு தீங்கு விளைவிக்கும், உண்மையில், அதை அதிகமாக சாப்பிடுவது குடல்களை வெகுவாக பாதித்து, உள்ளே இருந்து குடல் அழுக ஆரம்பிக்கலாம். இது பெரும்பாலும் ஹாட் டாக் மற்றும் தொத்திறைச்சிகளில் காணப்படுகிறது. இதில் உள்ள அதிக அளவு சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் குடல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் பிசர்வேடிவ்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

துரித உணவுகள்

ரொட்டி, பீட்சா, பர்கர்கள், கேக், பிஸ்கட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற குப்பை உணவுகள், இவை அனைத்திலும் நிறைய கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கொழுப்புகள் உள்ளன, இது நம் குடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் குடல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும். இது வளர்சிதை மாற்றத்தை பாதித்து உடல் எடை அதிகரிக்கவும்  முக்கிய காரணமாகிறது.

சர்க்கரை பானங்கள் மற்றும் ஆற்றல் பானங்கள் தீங்கு விளைவிக்கும்

சோடா, எனர்ஜி டிரிங்க்ஸ், பழச்சாறு போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அவற்றை குடிப்பதால் உடலில் அமிலம் உருவாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அமிலத்தின் தொடர்ச்சியான இருப்பு குடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.


வறுத்த உணவுகளை உட்கொள்வது

இது தவிர, 40 வயதிற்குப் பிறகு, ஒருவர் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உண்மையில், இதில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இதன் காரணமாக, அதிக ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் உருவாகத் தொடங்கி, அவை குடலுக்கு தீங்கு விளைவிக்கும். பேஸ்ட்ரிகள், கார்ன்ஃப்ளேக்ஸ், சிப்ஸ், க்ரிஸ்ப்ஸ், பாஸ்தா, வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு போன்ற அமில உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இவை குடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குடலை சுத்தமாக வைத்து கொள்வதே, ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். குடல் என்பது செரிமான மண்டலத்தின் முக்கிய அமசம். செரிமான மண்டலம் சிறப்பாக இருக்கவும், குடல் ஆரோக்கியமாக இருக்கவும், மாவு சத்துள்ள உணவுகளை குறைப்பதோடு, புரதம், இரும்பு, கால்ஷியம், நார்சத்து ஆகியவை அடங்கிய சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.


🔻 🔻 🔻 

உங்க உடலில் இருக்கும் நச்சுக்களை டக்குனு வெளியேற்ற ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருட்கள் போதுமாம்...!

 யுர்வேதம், இந்தியாவில் இருந்து தோன்றிய ஒரு பண்டைய மருத்துவ முறையாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கு உடலில் சமநிலையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

நச்சு நீக்கம் என்பது ஆயுர்வேதத்தின் முக்கிய அம்சமாகும், மேலும் பல்வேறு மூலிகைகள் இயற்கையாகவே உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதாக நம்பப்படுகிறது. ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், அது முழு உடல் அமைப்பையும் சுத்தப்படுத்தி, சாதாரண செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கும். ஆயுர்வேதத்தில் நச்சு நீக்கம் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

திரிபலா

திரிபலா அதன் மென்மையான மலமிளக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் நீக்குதலை ஊக்குவிக்கிறது. செரிமான அமைப்பை சுத்தப்படுத்தவும், நச்சு நீக்கவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் நச்சுத்தன்மை செயல்முறைக்கு உதவுகிறது. மஞ்சள் பொதுவாக அதன் ஒட்டுமொத்த ஆரோக்கிய நலன்களுக்காக ஆயுர்வேத மருந்துகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை

வேம்பு அதன் சுத்திகரிப்பு மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிக்கிறது மற்றும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. ஆயுர்வேத தோல் பராமரிப்பு கலவைகளில் வேம்பு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

குடுச்சி

குடுச்சி ஆயுர்வேதத்தில் புத்துணர்ச்சியூட்டும் மூலிகையாக கருதப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குடுச்சி பெரும்பாலும் மற்ற மூலிகைகளுடன் இணைந்து நச்சு நீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்காய்

ஆயுர்வேதத்தில் ஆம்லா என்று அழைக்கப்படும், இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. நெல்லிக்காய் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை பயக்கும்.

வெந்தயம்

வெந்தய விதைகள் செரிமான அமைப்பில் சுத்திகரிப்பு செய்யும் விளைவைக் கொண்டுள்ளன. அவை கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கின்றன. அதன் செரிமான நன்மைகளுக்காக ஆயுர்வேத மருந்துகளில் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி

இஞ்சியில் வைட்டமின் பி6 மற்றும் பிற உணவுத் தாதுக்கள் நிறைந்துள்ளன, இஞ்சியில் இருந்து நீங்கள் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி பி6 இருப்பதால் தான். இஞ்சியின் மற்றொரு பண்பு என்னவென்றால், இது எடையைக் கட்டுப்படுத்தும் தாவரமாகும்.

இஞ்சியில் உள்ள கலவை லிப்பிட் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், மற்ற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உங்கள் எடை ஏற்ற இறக்கங்களைத் தடுக்க இது உதவும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அடிப்படை மட்டத்தில் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இஞ்சி ஒரு லேசான மன அழுத்த மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது.

கொத்தமல்லி

கொத்தமல்லி ஒரு பிரபலமான சமையலறைப் பொருளாகும், இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் சருமத்தை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் கொத்தமல்லியை அழகுபடுத்தும் வடிவில் சேர்க்கலாம் அல்லது கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் கலந்து தினமும் உட்கொள்வதன் மூலம் டிடாக்ஸ் பானமாக தயாரிக்கலாம்.



🔻 🔻 🔻