Search

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனத்தில் 203 காலியிடங்கள்: இலைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

 மத்திய மின்அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள  இளநிலை பொறியாளர் பயிற்சி (எலக்ட்ரீசியன்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 12.12.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: இந்த ஆள்சேர்க்கை மூலம் 203 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.  இதில், பொதுப் பிரிவினருக்கு 89 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 47 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 18 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 39 இடங்களும், பழங்குடி இனத்தவருக்கு 10 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:  எலக்ட்ரீசியன் பாடப்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய படிப்பு, பிஇ, பிடெக் உள்ளிட்ட உயர்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 12.12.2023  அன்று 27 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

தேர்வு முறை:  கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer
Based written Test), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ரீதியான தேர்வு (Document Verification & Trade Test) ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கான ஊதியங்ங்கள் மற்றும் பணி நிபந்தனைகள், பணியின் தன்மை, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆள்சேர்க்கை  அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



🔻🔻🔻

NHPC Limited வேலைவாய்ப்பு 2023 – Degree, Diploma & ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

NHPC Limited வேலைவாய்ப்பு 2023 – Degree, Diploma & ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

NHPC Limited ஆனது Apprenticeship ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு Degree, Diploma & ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதி விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NHPC Apprentice காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice, Technician Apprentices மற்றும் Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Degree, Diploma & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  1. Shortlisting
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 20.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf
Apply Online


🔻🔻🔻

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான Axis வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான Axis வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Administration/Back Office Activities Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31/08/2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் பைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:

Administration/Back Office Activities Assistant பதவிக்கு என 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.

AXIS FINANCE கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant வயது வரம்பு:

08/12/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். 08/12/1983 மற்றும் 08/12/2005 அல்லது அதற்கு இடையில் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் 31/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

ONGC ஆணையத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!


ONGC ஆணையத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ONGC ஆணையம் ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Domestic Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ONGC காலிப்பணியிடங்கள்:

Domestic Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Domestic Data Entry Operator கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONGC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Domestic Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

ESIC ஆணையத்தில் Assistant Professor காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ. 2,39,607/- || முழு விவரங்களுடன்!

 

ESIC ஆணையத்தில் Assistant Professor காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ. 2,39,607/- || முழு விவரங்களுடன்!

Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 2,39,607/- மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Professor கல்வி தகுதி:

Teaching Experience கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Professor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,39,607/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.12.2023, 21.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

சென்னை Amazon நிறுவனத்தில் சூப்பரான வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

சென்னை Amazon நிறுவனத்தில் சூப்பரான வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை Amazon நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Quality Assurance Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் Quality Assurance Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Quality Assurance Associate கல்வி தகுதி:

Quality Assurance Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Quality Assurance Associate பிற தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் MS Office தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Quality Assurance Associate பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Amazon தேர்வு முறை:

இந்த Amazon நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

Quality Assurance Associate பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link   


🔻🔻🔻

Accenture நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

 

Accenture நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

Security Solution Development Security Solution Architect பணிக்கு என Accenture நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Accenture பணியிடங்கள்:

Security Solution Development Security Solution Architect பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Accenture நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Accenture கல்வி விவரம்:

இந்த Accenture நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Accenture அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 06 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accenture ஊதியம்:

Security Solution Development Security Solution Architect பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Accenture நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Accenture தேர்வு செய்யும் முறை:

இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link


🔻🔻🔻

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (CBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியிடங்கள்:

CBI வங்கியில் காலியாக உள்ள BC Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BC Supervisor கல்வி:

BC Supervisor பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் Graduate Degree, BE, MCA, M.Sc, MBA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

BC Supervisor வயது:

இந்த CBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BC Supervisor மாத ஊதியம்:

BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

CBI Bank தேர்வு செய்யும் விதம்:

இந்த CBI வங்கி பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBI Bank விண்ணப்பிக்கும் விதம்:

BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. 232 காலியிடங்கள்: இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

 இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 3 மண்டல வளாகங்களில் (Regional Campus) காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி இயக்குனர் (Assistant Director), உதவி நூலகர் ( Assistant Librarian) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்ன .

காலியிடங்கள்  பற்றிய விவரங்கள்: 

காலியிடங்கள் எண்ணிக்கை : 232

கீழ்காணும் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள்: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கணினியிய பொறியியல் (CSE),  தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம், மேலாண்மை அறிவியல்

உதவிப் பேராசிரியர் கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் மனிதவியல் துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர்,   தங்களது மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பொறியியல்/தொழில்நுட்ப துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது மேற்படிப்பில் 70%க்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்;

உதவி நூலகர் :  நூலகம் மற்றும் தகவல் அறிவியல், ஆவணப்படுத்துதல் அறிவியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய அளவில் யுஜிசி-ஆல் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்கல்வி உதவி இயக்குனர் : உடற்கல்வி,  விளையாட்டு அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

முக்கியமான நாட்கள்:  இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க : 13.12.2023 பிற்பகல் 5 மணி வரை.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.1,180ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர்  விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 472 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

Indigo Airlines-ல் வேலை தேடுபவரா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

 

Indigo Airlines-ல் வேலை தேடுபவரா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Indigo Airlines நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Technician பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Technician பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Technician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

 

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business process services (FAO Transformation) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM / BBS / B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business process services (FAO Transformation) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

FAO Transformation கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM / BBS / B.Com தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FAO Transformation முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 14 முதல் 18 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS ஊதிய விவரம்:

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

FAO Transformation தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF