Search

NABARD NABCONS-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!


NABARD NABCONS-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

Associate Project Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NABARD Consultancy Services ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NABARD NABCONS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate Project Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Associate Project Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD NABCONS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate Project Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD NABCONS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

RITES நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

 RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Assistant Resident Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RITES காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Assistant Resident Engineer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Diploma in Civil Engineering / Post Graduate / PG Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



🔻🔻🔻

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி போதும்!

 இந்திய விமானப்படை (IAF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் அக்னிபாத் பிரிவின் கீழ் வரும் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.01.2024 அன்று முதல் இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படை காலியிடங்கள்:

இந்திய விமானப்படையில் (IAF) 2024 ஆண்டில் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென தோராயமாக 3500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IAF Agniveervayu Intake 01 / 2025 கல்வி:

அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கு 10ம் / 12ம் வகுப்பு, Diploma அல்லது Vocational Coruse-ஐ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

IAF Agniveervayu Intake 01 / 2025 வயது:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 02.01.2004 அன்று முதல் 02.07.2007 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IAF Agniveervayu மாத ஊதியம்:  

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IAF தேர்வு செய்யும் விதம்:

இந்த இந்திய விமானப்படை (IAF) சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Phase I –  Online Test

Phase II – Physical Fitness Test, Adaptability Test II

Phase III – Medical Fitness Test

IAF விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

IAF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.01.2024 அன்று முதல் 06.02.2024 அன்று வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Research Assistant, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Junior Project Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Project Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree (B.E, B.Tech) / Master’s degree (M.Sc, ME/M.Tech) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Project Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து M.Sc Botany/ Pathology/Forestry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ICFRE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.01.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 04.01.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

SECI நிறுவனத்தில் Deputy Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

SECI நிறுவனத்தில் Deputy Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Solar Energy Corporation of India Limited-ல் (SECI) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 40 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  BE, B.Tech, B.Sc, CA, CMA, B.Com, MBA, PG Degree, PG Diploma, LLB, LLM, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,35,45 மற்றும் 48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.22,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Screening Test, Written Test, Trade Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
SECI தேர்வு செய்யும் முறை:
  1. Merit List
  2. Screening Test
  3. Written Test
  4. Trade Test
  5. Skill Test
SECI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.12.2023 அன்று முதல் 04.01.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

Day 52 | Unit 8 | Contribution of C N Annadurai

 Day 52 | Unit 8 | Contribution of C N Annadurai

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 52 |பொருத்துதல், தொடரும் - தொடர்பும் அரிதல், பிரித்து எழுதுக, எதிர்ச்சொல்லை அறிக, பொருந்தா சொல்லைக் கண்டறிதல்

 Day 52 |பொருத்துதல்,  தொடரும் - தொடர்பும் அரிதல், பிரித்து எழுதுக, எதிர்ச்சொல்லை அறிக, பொருந்தா சொல்லைக் கண்டறிதல் 

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

இதுவரை உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததே இல்லை என புலம்புகிறீர்களா..? இதை செஞ்சு பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..!

 அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. ஆனால் சிலவற்றை நமது வாழ்க்கையில் பின்பற்றினால் நாமும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருப்போம். அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.

அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருக்க உங்களுக்கு ஆசையா? ஒரு சிலர் மட்டும் எப்படி அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக மாற சில வழிகள் உள்ளது. நேர்மறையாக சிந்திப்பது, நன்றியோடு இருப்பது, உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை வைப்பது போன்றவை உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொண்டு வரும். நேர்மறையான எண்ணத்தோடு இந்த பழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையிலும் அதிர்ஷ்ட மழை பெய்யும்.

அதிர்ஷ்டத்தை நம்புங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உண்டா? நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான முதல் படி என்ன தெரியுமா? இந்த உலகத்தில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எத்தனை சவால்கள் வந்தாலும் அதை மீறி வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்டத்தை நம்புங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உண்டா? நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான முதல் படி என்ன தெரியுமா? இந்த உலகத்தில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எத்தனை சவால்கள் வந்தாலும் அதை மீறி வெற்றி பெறுவார்கள்.

நன்றியுணர்ச்சி :  வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் திருப்தியும் கிடைக்க வேண்டுமென்றால் நன்றியுணர்ச்சியோடு இருப்பது அவசியம். இதனால் உங்களிடம் நேர்மறையான ஆற்றல் வளரும். புதிய வாய்ப்புகளை மனம் திறந்து ஏற்றுக்கொள்வீர்கள்.

கடுமையாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் உழையுங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்றால், கடுமையான உழைப்பைக் கொடுங்கள். அமைதியாக தங்கள் வேலையை மட்டும் பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பரிசுகள் கிடைக்கும். வார்த்தைகளை விட செயல்களே அதிகமாக பேசும். அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என நினைக்காமல் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். கடுமையான உழைப்போடு அர்ப்பணிப்பும், மன உறுதியும் நேர்மறையான மனநிலையும் சேரும் போது வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உங்கள் வீட்டு வாசலை எட்டும்.

நீங்கள் புத்திசாலி இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள் : புத்திசாலியாக இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். உங்கள் அறிவுக்கூர்மையை மட்டும் நம்பாமல், கடுமையாகவும் மன உறுதியோடும் உங்கள் உழைப்பைக் கொடுங்கள்; அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் புத்திசாலியாக இருப்பதால் மட்டுமே அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

கிசுகிசு : உங்களைப் பற்றி பிறர் கூறும் கிசுகிசு, வதந்திகள், எதிர்மறை கருத்துகளை கண்டு கொள்ளாதீர்கள். தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதுகிறவர்கள் இதுபோன்ற உரையாடல்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி தீங்கான விஷயங்களை பேச மாட்டார்கள். தங்கள் லட்சியங்களை அடைவதில் தான் அவர்களின் கவனம் முழுவதும் இருக்கும். இந்த குணம் தான் உங்களுக்கு பல வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தருகிறது.

எதையாவது வித்தியாசமாக செய்யுங்கள் : வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் புதிய வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் எதிர்கொள்ளுங்கள். புதிய அனுபவங்களும், சவால்களும் உங்களுக்கு எதிர்பாராத நேர்மறை விளைவுகளைத் தரும். புதிய விஷயங்களில் ஈடுபடுவது, புதிய மனிதர்களை சந்திப்பது அல்லது வழக்கமாக செய்வதை விட்டுவிட்டு வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வது போன்றவை நிறைய அதிர்ஷ்டங்களை உங்கள் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும்.


🔻 🔻 🔻 

கரடிகளை போல் தூங்கக் கற்றுக்கொண்டால் மனிதர்கள் நீண்ட நாள் வாழலாமா..? ஆய்வு சொல்வது என்ன..?

குளிர்காலத்தில் கரடிகள் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிடும். இதனால்தான் கரடிகள் ஆரோக்கியமாக வாழ்கிறதா என விஞ்ஞானிகளும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். கரடிகள் வழக்கமாக குளிர் கலத்தில் ஆழ்ந்த உறக்கநிலைக்குச் சென்றுவிடும். இப்படி தூங்காவிட்டால் அவை பல நோய்களால் பாதிக்கப்படும். இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுமா?

சமீப ஆண்டுகளாக விண்வெளி நிறுவனங்களும் உலகம் முழுவதும் உள்ள ராணுவங்களும் உறக்கநிலை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. எப்படி கரடிகள் மட்டும் குளிர்காலத்தில் நீண்ட நாள் தூங்குவதால் இறக்காமல் உயிர் பிழைக்கின்றன என்ற பதிலை தேடுவதுதான் இவர்களின் நோக்கம்.


பொதுவாக மருத்துவப்படி, ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் போது உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். முக்கியமாக இதயத்துடிப்பு வெகுவாக குறையும். ஆனால் கரடிகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை. இதுகுறித்து ஸ்வீடன் மற்றும் டென்மார்க் பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒலே ஃப்ரோபெர்ட் ஆய்வு செய்து வருகிறார். இந்த கரடிகள் உயிரியல் தீர்வுக்கான வாழும் நூலகமாக இருப்பதாக இவர் கூறுகிறார்.

பழுப்பு நிற கரடிகள் எட்டு மாதங்கள் வரை உறக்கநிலையில் இருக்கின்றன. இதேப்போல் மனிதர்களும் தூங்கினால் நிலைமை மோசமாகிவிடும். எலும்புகள் பலவீனமாகிவிடும், தசைகள் சிதைந்துவிடும், தோல் அரிப்பு மற்றும் படுக்கைப் புண் போன்றவை ஏற்படும்.

எல்லாரும் கூறுவதுபோல் உறக்கநிலை என்பது உண்மையில் தூக்கம் அல்ல. அதையும் விட தீவிரமானது. சக்தியை பாதுகாக்கும் ஆழ்ந்த நிலை என்றுகூட சொல்லலாம். இதனால் கரடியின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு பத்து முறைக்கும் குறைவாகவே துடிக்கிறது. இதுவே மனிதர்கள் என்றால் ரத்தம் உறைந்துவிடும். ஆனால் கரடிகளுக்கோ எத்தனை மாதங்கள் உறங்கினாலும் ரத்தம் உறைவதில்லை.

News18

இதற்கு பதில் தேட ஆய்வாளர்கள் 13 பழுப்பு நிற கரடிகளை கோடை காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் துரத்தியும், குளிர்காலத்தில் அதன் குகைகளை பின்தொடர்ந்து சென்றும் கரடியின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதை ஆய்வு செய்ததில் HSP47 என்ற குறிப்பிட்ட புரதங்கள் கரடியில் இருப்பதை கண்டறிந்தனர். இந்தப் புரதம் கரடிகளிடம் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது என அவர்கள் கண்டுபிடித்தனர். இதுதான் அவை குளிர்காலத்தில் உயிர் பிழைப்பதற்கு காரணமாகும்.

ரத்த தட்டுகளின் மேற்பரப்பில் இருக்கும் இந்த புரதம், ரத்த செல்களை இறுக்கமாக ஒன்றினைக்கின்றன. இதன் காரணமாக காயம் ஏற்பட்டாலும் ரத்தம் கசிவது குறைந்து எளிதில் குணமாகின்றன. ஆனால் அதுவே நரம்புகளுக்குள் ரத்தம் உறைந்து, அது இயற்கையான முறையில் கரையவில்லை என்றால், இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த HSP47 புரதம் மனிதர்களிடமும் இதே விளைவுகளை ஏற்படுத்துமா எனப் பார்ப்பதற்காக முதுகுத்தண்டில் காயமுள்ளவர்களை பரிசோதித்தனர். ஆனால் இந்த நோயாளிகளிடம் பழுப்பு கரடிகள் போல ரத்தம் உறைவது அதிகமாக காணப்படவில்லை. இவர்களிடம் காயம் இல்லாத நபர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே HSP47 புரதம் இருந்தது.

இந்நிலையில் தற்போது ஃப்ரோபெர்ட் குழுவினர் ரத்தத்தை உறைய வைக்கும் மருந்துகளை உருவாக்க புதிய ரசாயனத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மருந்தை உருவாக்க இன்னும் ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகும் என இவர்கள் கூறுகின்றனர்.

 

🔻 🔻 🔻 

Happy New Year 2024 : புத்தாண்டு முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற திட்டமா..? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

 ஒரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். இந்த சமயத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கும். அதற்கான சில பயனுள்ள வழிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

தெளிவாக திட்டமிடுங்கள் : நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தெளிவாக திட்டமிடுவது அவசியம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதற்கான பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள். உடல் எடையை குறைக்க வேண்டும், அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஊட்டச்சத்து தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்: நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் அதற்கேற்ற உணவுகளை சாப்பிட முடியும். உங்கள் உடலுக்குத் தேவையான மேக்ரோனூட்ரியன்கள் (கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்) ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

உணவு திட்டமிடல் : உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற, எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என முதலில் திட்டமிட்டு கொள்ளுங்கள். காலை, மதியம், இரவு, மாலை நேர ஸ்னாக்ஸ் என எந்த நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதை திட்டமிட்டு அதன்படி சாப்பிட வேண்டும். பசியுடன் இருக்கும்போது ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்க இது உதவும்.

நீரேற்றம் : நாள் முழுவதும் நீரேற்றமாக உங்களை வைத்து கொள்வது அவசியம். இதற்கு போதுமான தண்ணீர் குடிக்கவும். சில நேரங்களில் பசி உணர்வுகள் நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே அந்த நேரத்தில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது அவசியம்.

சீரான உணவு: பழங்கள், காய்கறிகள், புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பல்வேறு சீரான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது போதுமான அளவிலான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள் : பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும். முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளை சாப்பிடுங்கள். தின்பண்டங்கள் சாப்பிட விரும்பினால் வீட்டிலே செய்து அளவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி : வழக்கமான உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியம் ஆகும். இது நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவுகிறது.

ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிக்க வழிகள்: ஃபைபர் எனும் நார்ச்சத்து உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது, ஆனால் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு 15 கிராம் மட்டுமே நார்ச்சத்தை எடுத்து கொள்கிறார்கள் . முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பழங்களை ஜூஸ் செய்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.

சிப்ஸ், வெள்ளை அரிசி, ரொட்டி மற்றும் பாஸ்தா இவற்றிற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பழுப்பு அரிசி, பார்லி, தினை மற்றும் முழு தானியங்களை எடுத்து கொள்ளுங்கள். நார்ச்சத்துக்கள் போதுமான அளவில் பெற 1-2 தேக்கரண்டி பாதாம், ஆளிவிதைகள் அல்லது தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பருப்பு, காய்கறிகள் சேர்த்த சூப் அருந்துங்கள்.

உணவின் மூலம் போதுமான நார்ச்சத்துபெற கடினமாக இருந்தால், மருத்துவர்கள் அறிவுரையின்படி ஃபைபர் சப்ளிமெண்ட் பயன்படுத்தப்படலாம்.


🔻 🔻 🔻 

ICAR – SBI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.30,000/- மாத ஊதியம்!

 

ICAR – SBI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.30,000/- மாத ஊதியம்!

Young Professionals I, Semiskilled Worker ஆகிய பணிகளுக்கென ICAR – கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் (ICAR – SBI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 29.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Written Test cum Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ICAR – SBI பணியிடங்கள்:

ICAR – SBI நிறுவனத்தில் Young Professionals-I பணிக்கென 06 பணியிடங்களும், Semiskilled Worker பணிக்கென 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.

ICAR – SBI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, B.Sc, M.Sc முடித்தவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI வயது விவரம்:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI ஊதிய விவரம்:
  • Young Professionals I பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Semiskilled Worker பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ICAR – SBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Written Test cum Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • Young Professionals I (IT) – 19.01.2024
  • Semiskilled Worker – 18.01.2024
  • Young Professionals I – 17.01/2024
ICAR – SBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF 1
Download Notification & Application Form PDF 2
Download Notification & Application Form PDF 3

TCS நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி – ஆன்லைனில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

TCS நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி – ஆன்லைனில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Verification Engineer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Verification Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Verification Engineer கல்வி தகுதி:

Electrical Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree-யை அரசு / அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

TCS அனுபவம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Verification Engineer பணியமர்த்தப்படும் இடம்:

Verification Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் உள்ள TCS நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

TCS தேர்வு முறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senior Verification Engineer விண்ணப்பிக்கும் முறை:

Verification Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 31.03.2024 அன்றுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link

 


🔻🔻🔻

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PPCC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Scientist C பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய காலியிடங்கள்:

Scientist C பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (PPCC) காலியாக உள்ளது.

Scientist C கல்வி:

இந்த புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Scientist C அனுபவ காலம்:

இப்பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 / 08 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientist C வயது:

Scientist C பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Scientist C மாத ஊதியம்:

இந்த PPCC நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் தரப்படும்.

Scientist C தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

Scientist C விண்ணப்பிக்கும் விதம்:

Scientist C பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 24.01.2024 (With in 42 Days) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Day 51 | Part 2 | Mensuration 3D | Aptitude

 Day 51 | Part 2 | Mensuration 3D | Aptitude

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group