Search

Ford India நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 Ford India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் NA VOR Analyst பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ford India காலியிடங்கள்:

NA VOR Analyst பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Ford India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NA VOR Analyst கல்வி:

இந்த Ford India நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

NA VOR Analyst அனுபவ காலம்:  

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

NA VOR Analyst மாத ஊதியம்:

NA VOR Analyst பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Ford India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியமாக பெறுவார்கள்.

Ford India தேர்வு செய்யும் விதம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.01.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள் || சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!

 Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Domain Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Domain Consultant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Domain Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Domain Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Engineering முடித்து விட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!

 Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் IT Asset Management பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் IT Asset Management பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

IT Asset Management கல்வி விவரம்:

IT Asset Management பணிக்கு பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree-யை (BE) அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி வாரியங்களில் படித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IT Asset Management அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் 06 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

IT Asset Management பணியமர்த்தப்படும் இடம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

TCS தேர்வு செய்யும் முறை:

IT Asset Management பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Written Test, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 31.03.2024 என்ற கடைசி நாளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

சென்னை DRDO – CVRDE நிறுவனத்தில் 60 காலியிடங்கள் – ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 DRDO – CVRDE நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் IT Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென, மொத்தமாக 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO – CVRDE காலியிடங்கள்:

DRDO – CVRDE நிறுவனத்தில் IT Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 60 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Carpenter – 02 பணியிடங்கள்

Computer Operator & Programming Assistant – 08 பணியிடங்கள்

Draughtsman – 04 பணியிடங்கள்

Electrician – 06 பணியிடங்கள்

Electronics – 04 பணியிடங்கள்

Fitter – 15 பணியிடங்கள்

Machinist – 10 பணியிடங்கள்

Mechanic – 03 பணியிடங்கள்

Turner – 05 பணியிடங்கள்

Welder – 03 பணியிடங்கள்

IT Apprentices கல்வி:

IT Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

IT Apprentices வயது:

01.12.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

IT Apprentices ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

DRDO – CVRDE தேர்வு செய்யும் விதம்:

IT Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Screening Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO – CVRDE விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DRDO – CVRDE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 உலகில் அதிகமானோரை தாக்கும் புற்றுநோய்களில் ஐந்தாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. அதுமட்டுமின்றி புற்றுநோய் இறப்புகளில் மூன்றாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. பொதுவாக வயிற்றுப் புற்றுநோய், வயிற்றின் மென்படலத்தில் உருவாகத் தொடங்கும்.

இந்த புற்றுநோய் குறித்து மக்களிடம் முறையான விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். அதெல்லாம் சரி, நமக்கு வந்திருப்பது வெறும் வயிற்று வலியா அல்லது புற்றுநோயா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் : 

ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், குடும்பத்தில் வேறு யாருக்காவது இதற்கு முன் வயிற்றுப் புற்றுநோய் வந்திருப்பது போன்றவை இந்த கேன்சருக்கான ஆபத்து காரணிகளாகும். சில சமயங்களில் ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா புற்றுநோய் அல்லாத அல்சர் நோயை உருவாக்கக் கூடும். நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம், அடிவயிற்றில் வலி, குமட்டல், பசியின்மை போன்றவை வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். செரிமானமின்மைக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

வயிற்றுப் புற்றுநோய்க்கு இதுதான் அறிகுறி என குறிப்பிட்டு எதையும் கூற முடியாது. ஆகையால் மேற்கூறிய அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்கள் மருத்துவமனை சென்று எண்டோஸ்கோபி உதவியுடன் தனக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம். வயிற்றுப் புற்றுநோய் முற்றிய பின் உடல் எடையிழப்பு, மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதை வைத்து நமக்கு வந்திருப்பது வயிற்றுப் புற்றுநோய் என்பதை ஓரளவு கணிக்க முடியும். எனினும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இதை எளிதாக குணபடுத்த முடியும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

சாதாரணமாக நமக்கு ஏற்படும் வயிற்று வலி அஜீரணக் கோளாறு காரணமாக வரக்கூடும். இவை சீக்கிரமாகவே சரியாகிவிடும். ஆனால் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு சீக்கிரம் குணமாகாது. மேலும் காரணமில்லாத எடையிழப்பு, தொடர்ச்சியான குமட்டல் மற்றும் ரத்தத்துடன் வாந்தி மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் கடுமையாகவும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. எனினும், இந்த அறிகுறிகள் இருந்தால் அது புற்றுநோய் தான் என்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. முறையான பரிசோதனை மூலம் மட்டுமே இதனை கண்டறிய முடியும்.

வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :

உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுங்கள். சீரான உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது வயிற்றுப் புற்றுநோய் வந்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால் கீமோதெரபி, ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுக்குள் மட்டும் புற்றுநோய் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். அதுவே மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட்டால் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சில சமயங்களில் நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்பு கீமோதெரபி செய்யப்படுவதும் உண்டு.

🔻 🔻 🔻 

சிறுநீரக கல் முதல் யூரிக் அமில பிரச்னை வரை... வாழைப்பூவின் மருத்துவ பலன்கள் இதோ!

 பூ ஒன்றை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம் என்று சொன்னால், சட்டென்று பூவை எப்படி சமைப்பது என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். ஆனால், அது வாழைப்பூ என்று உங்களுக்கு நினைவூட்டினால் போதும், அதில் எத்தனை ரகமான உணவுகளை செய்ய முடியும் என்று பெரிய பட்டியலே போட்டு விடுவீர்கள்.

அதிலும் வாழைப்பூ வடை என்றால் தமிழர்களுக்கு கொள்ளை பிரியம். அதனை முருங்கை கீரையுடன் சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழைப்பூ சிறந்த உணவாக இருக்கிறது.

மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் வாழைப்பூவில் பக்கோடா செய்து சாப்பிடுகின்றனர். இன்னும் பல மாநிலங்களில் வாழைப்பூ சூப் அருந்தும் வழக்கம் இருக்கிறது.

News18

எண்ணற்ற பலன்கள் : 

பொதுவாக பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வாழைப்பூவில் நிறைவாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே நம் உடல் நலனுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பவை. அதுபோக வாழைப்பூவை சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் பிரச்னை மற்றும் யூரிக் அமில பிரச்னையை தீர்க்க உதவும் என்று குறிப்பிடுகின்றனர். பிற பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

கரையத்தக்க நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகிய இரண்டு வகை நார்ச்சத்துக்கள் இதில் உண்டு. இவை நம் மெடபாலிச நடவடிக்கையை ஊக்குவிப்பவை. அதேபோல செரிமான சக்தியை மேம்படுத்தும். தேவையற்ற கழிவுகளை மலம் வழியாக வெளியேற்றும்.

News18

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி குறையும் மற்றும் எலும்புகளின் அடர்த்தி மேம்படும்.

எலும்புகளுக்கு மத்தியில் சிதைவு ஏற்பட்டால் அதில் யூரிக் அமிலம் தங்கும். அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட வாழைப்பூ சாப்பிட்டால் இதில் இருந்து தீர்வு கிடைக்கும் மற்றும் வலி இருக்காது.

வாழைப்பூ பொரியல் செய்யும் முறை: 

வாழைப்பூவில் உள்ள வெள்ளை நிற வெளிப்புறத் தோல் மற்றும் நரம்புகளை நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை தண்ணீரில் வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் 50 மில்லி அளவுக்கு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொறிக்கவும்.

News18

பிறகு வர மிளகாய் 5, 6 துண்டுகளை எண்ணெயில் வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வேக வைத்த வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றிய பிறகு கீழே இறக்கி பரிமாறலாம்.

🔻 🔻 🔻 

8 வாரத்துக்கு தொடர்ந்து சீரக தண்ணீரை இப்படி குடிங்க.. எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைஞ்சிடும்..!

 அதிகப்படியான கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சீரக தண்ணீர் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் பெறப்படும் தண்ணீர் சீரக தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி அதனை வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற கெமிக்கல்கள் நிறைந்த இந்த சீரக தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு பெயர் போனது.

சீரக விதைகளில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் மற்றும் LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு உதவுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக சீரக விதைகளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலுடன் ஒட்டிக் கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்திற்குள் நுழைவதை தடுக்கிறது.

தொடர்ந்து 8 வாரங்களுக்கு வெறும் வயிற்றில் இந்த சீரக தண்ணீரை குடித்து வரும் நபர்களுக்கு டிரைகிளிசரைடு அளவுகள் மற்றும் LDL கொலஸ்ட்ரால் குறைவதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு ஆய்வில், சீரகத் தண்ணீர் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நீரழிவு நோயாளிகளின் நிலைமையை மேம்படுத்தியதாக கூறுகிறது.

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரகம் எந்த அளவுக்கு உதவும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் பல்வேறு விதமான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றாலும் கூட இது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது.

News18

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரக நீரை தயாரிப்பது எப்படி?

- ஒரு டீஸ்பூன் அளவு சீரக விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய டம்ளர்களில் பெரிய டம்ளர் ஒன்றை எடுத்து, அதில் தண்ணீரை நிரப்பி சீரகத்தை சேர்க்கவும். இதனை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளலாம்.

- மறுநாள் காலை சீரக விதைகளை வடிகட்டி நீக்கிவிட்டு கிடைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் பருகவும்.

- இவ்வாறு சீரகத் தண்ணீரை நீங்கள் தொடர்ந்து பல நாட்களுக்கு குடித்து வரலாம். எனினும் உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நீங்கள் ஏதேனும் இயற்கையான வழிகளை முயற்சித்து பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்தால் இந்த சீரக தண்ணீர் உங்களுக்கு ஒரு அற்புதமான வழியாக அமையும். இதனை தயார் செய்வது எளிது, அதோடு மிகக் குறைந்த விலையில் மற்றும் பாதுகாப்பான முறையில் இதனை நாம் பெறலாம்.

News18

இப்பொழுது உங்களது நாளை சீரகத் தண்ணீருடன் துவங்குவதால் கிடைக்கக்கூடிய சில பலன்கள் குறித்து பார்க்கலாம்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது - செரிமானத்திற்கு அவசியமான திரவங்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி சீரக தண்ணீர் குடிப்பதால் மேம்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுகிறது. மேலும் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது - வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு எரிப்பதை மேம்படுத்துவதால் சீரக தண்ணீர் உடல் எடை குறைவதற்கு வழி வகுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது - நீரிழிவுநோயாளிகள் சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அவர்களது ரத்த சர்க்கரை அளவுகள் சீராவதை கவனிக்கலாம்.

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் - சீரகத் தண்ணீரில் இருக்கக்கூடிய வீக்க எதிர்ப்பு பொருட்கள் உடல் முழுவதும் ஏற்படக்கூடிய வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றன. இது பல்வேறு விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எச்சரிக்கை: இந்த வீட்டு வைத்தியம் ஒரு பரிந்துரையாகவும் மற்றும் குறிப்பாக மட்டுமே ஒருவர் கருத வேண்டும். நீண்ட கால அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியமாக கருத வேண்டாம். உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிடுங்கள்.


🔻 🔻 🔻 

குளிர்காலத்தில் கை, கால் விரல்கள் வீங்குகிறதா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

 

குளிர்காலம் வந்தாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் வரிசைகட்டி வந்துவிடும். இந்த சமயத்தில் சூடான சாக்லேட் காஃபி குடிக்கும் போது நமக்கு கதகதப்பு கிடைத்தாலும் கடுமையான குளிர் காரணமாக நமது கை மற்றும் கால் விரல்களில் வீக்கம் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சனைகள், மூட்டு வலி, தசை வலி, பனிக்கடுப்பு போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோம். ஆனால் கை மற்றும் கால் விரல்களில் வரும் வீக்கம் சில்பிளைன்ஸ் என்று அழைக்கப்படும் குளிர் கொப்புளத்தை உண்டாக்குகின்றன.

நாளங்களை பாதிக்கிறது. இதன் காரணமாக சருமத்தில், முக்கியமாக கை, கால் விரல்கள், காதுகள், மூக்கில் சிறியதாக சிவப்பு அல்லது நீல நிறத்தில் அரிப்பு ஏற்படுகிறது.

குளிர்கால கொப்புளங்களின் அறிகுறிகள்

வீக்கம்: கொப்புளம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி வீக்கம் உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது மென்மையாக இருக்கும்.

சருமம் நிறம் மாறுதல்: பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாறும். சருமத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே இப்படி தோலின் நிறம் மாறுகிறது.

அரிப்பு மற்றும் எரிச்சல்: குளிர்கால கொப்புளம் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலைத் தரும். இதனால் தினசரி பணிகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும்.

கொப்புளம் அல்லது புண்: தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தொடர்ச்சியாக குளிர் நேரத்தில் வெளியே சென்று வந்தால் கொப்புளம் அல்லது புண் உருவாகும். இது வலியை ஏற்படுத்துவதோடு தொற்றை அதிகரிக்கும்.

News18

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கதகதப்பு: குளிர்காலத்தில் நிறைய உடைகள் அணிந்து உடலை சூடாக வைத்திருங்கள். கைகள், கால்கள், காது, மூக்கு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாக்ஸ், கிளவுஸ், தொப்பி, ஸ்வெட்டர் அணிந்துகொண்டு வெளியே செல்லுங்கள்.

திடீர் வெப்பநிலை மாற்றத்தை தவிர்க்கவும்: கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பகுதிகளை கதகதப்பாக்குங்கள். அப்போதுதான் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு குளிர் கொப்புளம் வருவதும் தடுக்கப்படுகிறது.

கதகதப்பான அறை: நீங்கள் வசிக்கும் வீடு, பணியிடம் போன்றவை கதகதப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் அறைக்குள் சரியான வெப்பநிலை நிலவுவதற்கு வசதியாக ஹீட்டரை பயன்படுத்தலாம்.

குளிர் மற்றும் ஈரம் உடலில் படக்கூடாது: ஈரமான மற்றும் குளிரான இடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். குளிரான பகுதியில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உடலில் ஈரம் படுவதை தவிர்க்கவும்; நேரம் கிடைக்கும் போது வெப்பமாக பகுதியில் ஓய்வெடுங்கள்.

கால்களை பராமரியுங்கள்: உங்கள் கால்களை ஈரமின்றி வைத்திருங்கள். வெளியே செல்லும் போது தண்ணீர் புகாத காலனிகள் அல்லது ஷூக்களை அணியுங்கள். கால்கள் வறண்டு போகாமல் தடுக்க அவ்வப்போது மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள். இது குளிர் காலத்தில் கொப்புளம் வருவதை தடுக்கும்.

🔻 🔻 🔻 

தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

 ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருப்பது துளசி ஆகும். பலருடைய வழிபாட்டு முறைகளில் துளசி முக்கிய இடத்தை பெறுகிறது. அதே சமயம், இதை ஒரு மூலிகை எனக் கருதி, உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர்.

துளசி நறுமனம் கொண்டது. அதே சமயம், சாப்பிடும்போது லேசான காரம் தென்படும். காலையில் எழுந்ததும் 4, 5 துளசி இலைகளை வாயில் மென்று விழுங்கும் பழக்கம் இன்றைக்கும் பலரிடம் உள்ளது. பல நூற்றாண்டுகளாகவே மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படும் துளசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

துளசியின் ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் அளவு துளசியில் 23 கலோரிகள் உள்ளன. அதுபோக 5.32 கிராம் மாவுச்சத்து, 1.6 கிராம் நார்ச்சத்து, 0.3 கிராம் சர்க்கரை சத்து, 2.2 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன.
இது மட்டுமல்லாமல் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மேங்கனீஸ் ஆகிய சத்துக்களும் துளசியில் உள்ளன.

News18

ஆரோக்கிய நன்மைகள் :

1. துளசியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்களும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதனால் தொற்றுகள் தவிர்க்கப்படும்.

2. துளசி சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் ஏற்படக் கூடிய கார்டிசோல் ஹார்மோன் அளவு குறையும். அழற்சிக்கு எதிரான தன்மையை கொண்டுள்ளது.

3. நுண்ணுயிர்களுக்கு எதிரான தன்மை கொண்ட துளசியை சாப்பிட்டால் சுவாசம் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

4. நம்முடைய செரிமானம் மேம்படும். வயிறு உப்புசம் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் தீரும்.
5. துளசி கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைப்பதாகவும், இதய நலனை மேம்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் துளசி சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் நிச்சயமாக துளசி சாப்பிடலாம். அது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். அதேபோல, விட்டமின்கள் நிறைந்த துளசியை கர்ப்பிணி பெண்களும் எடுத்துக் கொள்ளலாம். எனினும் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

News18

கட்டுக்கதைகள்…

அனைத்து வியாதிகளுக்குமான ஒரே தீர்வு துளசி எனக் குறிப்பிடுவது தவறு.

 துளசி சாப்பிட்டால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை எனக் கூறுவதும் பொய்யான தகவல் ஆகும். அடிப்படையான ஆரோக்கிய பலன்களை துளசி தரக் கூடியதாகும். எனினும் மிகுதியாக சாப்பிட்டால் அலர்ஜி, வயிறு சார்ந்த இதர பிரச்சனைகள் போன்றவை உருவாகலாம்.தினசரி துளசி சாப்பிடுவதாக இருந்தால் அது உங்கள் உடலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

🔻 🔻 🔻 

பெண்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குதா..? அவசியம் டிரை பண்ணுங்க..!

 நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் குறித்து மக்களுக்கு நாளுக்கு, நாள் விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டீ, காஃபி போன்றவற்றில் நாம் சேர்த்துக் கொள்ளும் சீனி எனப்படும் வெள்ளை நிற கிறிஸ்டல் சர்க்கரையை பார்த்தாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது.

ஆனால், இந்த சீனி என்பது மட்டுமே சர்க்கரை அல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் மாவுச்சத்து என்னும் வகையிலான சர்க்கரை சத்து இருக்கத்தான் செய்கிறது. பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என எதுவானாலும் அதில் சர்க்கரை சத்து உண்டு.

அதிக சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள்

அளவுக்கு அதிகமான சர்க்கரை சத்து நம் உடலில் ஏற்படும்போது அதனால் ஹர்மோன் சமநிலை பாதிப்பு அடையக் கூடும். குறிப்பாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படும் மற்றும் அழற்சி உண்டாகும். பெண்களைப் பொருத்தவரையில் மாதவிலக்கு காலத்தில் வயிற்றுப்பிடிப்பு, உப்புசம் மற்றும் எண்ண தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

ஆனால், சர்க்கரையை மட்டும் குறைத்துக் கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுதான் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஊட்டச்சத்து உணவுகள்

முழு தானியங்கள், மெல்லிய புரதம், வெவ்வேறு வகையான பழங்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை தவறுகின்ற பிரச்சனையை தவிர்க்கலாம்.

சர்க்கரையால் அழற்சி ஏற்படும்

சர்க்கரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் பிரேர்னா திரிவேதி கூறுகையில், “சர்க்கரையால் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளில் பிரதானமானது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆகும். இன்சுலின் உற்பத்தி குறைவதால் நம் உடலில் சர்க்கரை தன்மை அதிகரிக்க கூடும். இதனால் கூடுதல் இன்சுலினை பெருக்க உடல் முற்படும். அதனால் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி ஆகும்.

இந்த ஆண்ட்ரோஜன் ஆண்களுக்கான ஹார்மோன் ஆகும். இதனால் மாதவிலக்கு தடைபடும் அல்லது சீரற்ற வகையில் மாதவிலக்கு ஏற்படும் மற்றும் பரு உண்டாகும். அதேபோல சர்க்கரையால் ஏற்படுகின்ற அழற்சி காரணமாக மாதவிலக்கு கால வயிற்றுப்பிடிப்பு கடுமையாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

சர்க்கரையை குறைப்பது எப்படி?

மாதவிலக்கு காலத்தில் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை பெண்களிடம் அதிகரிக்கும். ஆனால், அதற்கு இடமளிக்கும் பட்சத்தில் வலி மற்றும் இதர தொந்தரவுகள் அதிகரிக்கும். அதே சமயம், சர்க்கரை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

* செயற்கையான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் எப்போதுமே ஆபத்தானவை தான். அதற்குப் பதிலாக முழு தானிய உணவுகள், நிறையூட்டப்படாத இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

* வெல்லம், பேரீட்சை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கிற போது, மனதின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபயிற்சி, அரட்டை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.



🔻 🔻 🔻 

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..! இது தான் சரியான நேரம்..! தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த விமான படையில் சேர விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, இந்திய விமானப்படை சார்பில், அக்னிபாத் திட்டத்தின் அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 17.01.2024 முதல் 06.02.2024 வரை இணையவழியாக விண்ணப்பிப்பதற் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியடைய விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணைய வழித்தேர்வு மார்ச் மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது.

2-1-2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2-7- 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோ மோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர் மேசன் டெக்னாலஜி) மூன் றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய 3 நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத் திட் டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தொடர்புக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

 தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று,  ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியமைக்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஜீப்பு ஓட்டுநர், அலுவலக விண்ணப்பங்கள் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை  www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் 10.01.2024-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2024-ஆம் தேதி முதல் 30.01.2024-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் அரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

🔻🔻🔻