Search

உடலில் பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பை அடியோடு சுரண்டி எடுக்கும் 5 வழிகள்..!

 அவசர வாழ்க்கையில் செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளையும், தின்பண்டங்களையும் எடுத்துக் சாப்பிடுவது நம்மிடத்தில் பரவலாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஓய்வின்றி இருந்த இடத்தில் உழைப்பு, போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்றவற்றால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு தங்கி, பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

இப்படி உடலுடன் பசை போல ஒட்டிப்பிடித்திருக்கும் கெட்டக் கொழுப்பு எனப்படும் எல்டிஎல் அளவைக் குறைத்தால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இல்லையென்றால் உடலுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். முக்கியமாக இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உயிர் போகும் அபாயம் அதிகம் என்கிறது மருத்துவம் குறிப்புகளும், அதன் வரலாறுகளும்!

சரி. இதை சீர்செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்றால், உணவு கட்டுப்பாடு தான் முன்னிலையானதாக இருக்கும். எனவே, அதிகளவு தேவையில்லாத கொழுப்பு சேர்வதை எப்படி கண்டறிவது, அதன் வளர்ச்சியை எப்படி தடுப்பது என்பதை பார்க்கலாம்.

உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அதாவது எல்டிஎல் அளவை கண்டுபிடிப்பது எப்படி? : உடலில் அதிகளவு கெட்டக் கொழுப்பு சேரும்போது எந்தவித அறிகுறிகளையும் அவை ஏற்படுத்துவதில்லை. இதன் காரணமாகத் தான் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள கூறுகின்றனர். அப்படி செய்யும்போது ரத்தத்தில் சேர்ந்துள்ள சரியான நல்லக் கொழுப்பு (எச்.டி.எல் / HDL) மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதன்படி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்க மாற்றங்கள் குறித்து மருத்துவரை அணுகித் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் கெட்டக் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கைமுறை - பசிக்கும் போது சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை உடனே நிறுத்தி விடுங்கள்.

கொழுப்புள்ள உணவுகள் - கெட்டக் கொழுப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பொரித்த உணவுகள் எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினசரி உணவில் பொரித்த உணவுகளை சேர்த்துக் கொண்டால், அவை நம் உடலில் அநாவசிய கொழுப்பு சேர காரணமாகி விடும்.

உடற்பயிற்சி - தினமும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது நம் இதயத்தை வலுவாக்கிறது. ரத்த நாளங்களை துடிப்புடன் செயல்படுத்துகிறது. அலுவலகம் மற்றும் வெளியே செல்லும்போது மாடிப் படிகளைப் பயன்படுத்துங்கள். மின்தூக்கிகளை தவிர்த்து வருவதே நம் ஆரோக்கிய வாழ்க்கை முறையில் முதல் படியாக இருக்கும்.

மருந்துகள் - ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பின் அளவை பரிசோதனை வாயிலாக தெரிந்துகொண்டு, அப்படி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி குறுகிய காலத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் பெரிய பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அறிவுரைப்பட ரத்த நாளங்களில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக நீக்குவது நல்லது.


🔻 🔻 🔻 

இஞ்சி தண்ணீர் vs இஞ்சி தேநீர்.. நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது.?

 நம்முடைய இந்திய சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபலமான பொருள் இஞ்சி. உணவின் சுவையை அதிகரிப்பதில் இருந்து ஸ்ட்ராங்கான டீ-யை தயாரிப்பது வரை பல வழிகளில் இஞ்சி நமது டயட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இஞ்சி இருக்கிறது. எனவே தான் பாலரும் தங்கள் டயட்டில் பல வழிகளில் இஞ்சியை சேர்த்து கொள்கிறார்கள்.


சிலர் இஞ்சி தரும் ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்காக அதை தேநீராக தயாரித்து குடிப்பார்கள் சிலர் இஞ்சி தண்ணீரை குடிப்பார்கள். இருப்பினும் இந்த இரண்டில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்ற கேள்வி பலரின் மனதில் அடிக்கடி எழுகிறது. இஞ்சி தண்ணீர் , இஞ்சி தேநீர் இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? பார்க்கலாம் வாருங்கள்…


இஞ்சி டீ: குளிர்காலம் அல்லது கோடை காலம் என எதுவாக இருந்தாலும் பலர் இஞ்சி டீ குடிக்க விரும்புகிறார்கள். பச்சை தேயிலையுடன் ஒப்பிடும் போது இஞ்சி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இந்த கலவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே சமயம் இஞ்சி டீ-யானது வாத தோஷத்தை பாதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தின்படி வாத தோஷம் என்பது உடலின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் இயக்கத்தின் ஆற்றல் என குறிப்பிடப்படுகிறது. மேலும் இது காற்று மற்றும் விண்வெளி கூறுகளை குறிக்கும். இஞ்சி டீ-யை அதிகம் பருகுவதால் வாதத்தின் அளவு அதிகரிக்கலாம். உடலில் வாதத்தின் அளவு அதிகரிப்பது வாயு, உப்புசம் மற்றும் பதட்டம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

உலர்ந்த இஞ்சி தண்ணீர்: இஞ்சி டீ வாதத்தை தூண்டி தேவையற்ற சில விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கும் நிலையில், உலர்ந்த இஞ்சி தண்ணீர் சிறந்ததாக இருக்கும். உலர்ந்த இஞ்சித் தூலாய் பயன்படுத்தி காய்ச்சப்படும் இந்த பானம் நம்முடைய செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உப்புசத்தை போக்க உதவுகிறது. தவிர உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உலர் இஞ்சி தண்ணீர் மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை குறைக்கிறது.


ஃபிரெஷ்ஷான இஞ்சி தண்ணீர்: உலர் இஞ்சி தண்ணீர் பல நன்மைகளை தரும் அதே நேரம் ஃபிரெஷ்ஷான இஞ்சிகொண்டு தயாரிக்கப்படும் தண்ணீரானது சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணம் அளிக்க பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இஞ்சியில் gingerols நிறைந்திருக்கிறது. எனவே ஃபிரெஷ்ஷான இஞ்சியை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி தண்ணீர் ரத்த நாளங்களைநன்கு திறக்க உதவி பிளட் சர்குலேஷனை ஊக்குவிக்கிறது மற்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

எது சிறந்தது.? இஞ்சி தண்ணீர் மற்றும் இஞ்சி டீ இரண்டுமே நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. உங்கள் உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இஞ்சி தண்ணீர் அல்லது இஞ்சி டீ-யை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. உலர் இஞ்சி தண்ணீர் வாயு மற்றும் உப்புசம் போன்ற வாத தோஷம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க உதவும் அதே நேரம், ஃபிரெஷ்ஷான இஞ்சி நீர் சளி தொந்தரவுகளை நீக்குகிறது மற்றும் ரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது.


🔻 🔻 🔻 

இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவும் 5 காய்கறிகள்..!

 இன்றைய காலத்தில் இளம் வயதினர் கூட இதய நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய கரணம் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்றுதான் கூற வேண்டும்.

காய்கறிகள் அதிகமாக கொண்ட சரிவிகித உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் இதய நலனிற்கு உதவி செய்யும் 5 காய்கறிகள் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை மருத்துவ சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். இதய அடைப்புகளை சரி செய்யாவிட்டால் பெருந்தமனித் தடிப்பு நோய் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் சரிவிகித டயட்டில் ஒரு பகுதியாக இருக்கும் காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில குறிப்பிட்ட காய்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இவை இதய நோய் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவி செய்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பேண வேண்டுமென்றால் இந்த 5 காய்கறிகளை உங்கள் டயட்டில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பச்சை இலை காய்கறிகள் :  உங்கள் இதயத்திற்கு சிறந்த நண்பனாக இருக்கிறது பச்சை இலை காய்கறிகள். கீரை, காலே, ஸ்விஸ் சார்டு (பெரும்பாளைக் கீரை) போன்றவற்றில் அதிகளவு வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உங்கள் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.

ப்ரக்கோலி : மரம் போன்ற வடிவில் சிறியதாக இருக்கும் ப்ரக்கோலி, நம் இதயத்திற்கு உற்ற தோழனாக இருக்கிறது. ப்ரக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட், வைட்டமின், நார்ச்சத்து ஆகியவை நிறம்பியுள்ளது. இதிலுள்ள சல்ஃபோரபீன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.


தக்காளி : இதயத்திற்கு நன்மை செய்யும் லைகோபீன் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் தக்காளியில் அதிகமுள்ளது. இவை உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கிறது.

அவகேடோ : ஊட்டச்சத்து அதிகமுள்ள அவகேடோவில் இதயத்திற்கு நன்மை செய்யும் நிறைவுற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.


குடை மிளகாய் : குடை மிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமுள்ளது. இவை இதயத்தில் ஏற்படும் குறைபாட்டை குறைக்க உதவுவதோடு இதய நலனையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ சிகிச்சை அவசியம் : உங்கள் டயட்டில் காய்கறிகளை சேர்ப்பது இதய நலனை மேம்படுத்தும் என்றாலும் புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுவதும், சரிவிகித டயட்டை பின்பற்றுவதும், மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதும், சீரான உடற்பயிற்சியும் அவசியமாகும். இதயத்தில் அடைப்பு அல்லது வேறு எந்தப் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடல்நிலையை பொறுத்து உங்களுக்கு தேவையான சிகிச்சை, மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவற்றை அவர் பரிந்துரைப்பார். சில அரிதான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது.


🔻 🔻 🔻 

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் தாக்குவதற்கு என்ன காரணம் தெரியுமா..?

 அனைத்து தரப்பினருக்குமே குளிர்காலம் பிரச்சனை தரக்கூடியதகவே இருக்கிறது. அதுவும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குளிர்காலத்தில்தான் மாரடைப்பு மற்றும் பக்கவாத சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

கோடை காலத்தை விட குளிர்காலத்தில் வரக்கூடிய மாரடைப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேப்போல் குளிர்கால காலை நேரத்தில் மாரடைப்பு மற்றும் ஆஞ்சினா நெஞ்சு வலியும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

குளிர்காலத்தில் குறைவான வெப்பநிலை இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுகள் அதிகமாக காணப்படும். ஏற்கனவே இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தொற்றுகளும் ஒன்றாக வரும் போது நிலைமை மோசமாகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ரத்தத்தை விநியோகிக்கவும் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ளவும் நம்முடைய இதயம் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்கிறது.

News18

இந்தப் பருவத்தில் எங்கும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்கி இதய தசைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக ரத்த உறைந்து, உடலில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாகவே குளிர்காலத்தில் நெஞ்சு வலியும் மாரடைப்பும், இதயம் சம்மந்தமான நோய்களும் அதிகமாக வருகின்றன.

இதுபோன்ற ஆபத்தைக் குறைக்கவும் குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரான சூழ்நியையை தாங்க முடியாதவர்கள் வெதுவெதுப்பை தரும் ஆடைகளை அவசியம் அணிந்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளேயே உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள யோகா, ஏரோபிக்ஸ், தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து குளிர்காலத்தில் ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இதய பிரச்சனைகளை ஓரளவிற்கு தடுக்க முடியும். உங்கள் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, ரத்தக்குழாய் தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள். ஏனென்றால் இவைதான் இதயப் பிரச்சனைகளை தீவிரமாக்கக் கூடியவை. இதய நோயாளிகள் அதிக வேலைப்பளுவை தவிர்க்கவும்.

சிகரெட் பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவற்றை கைவிட்டு வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதயப் பிரச்சனைகள் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். குளிர்காலத்தில் உணவை கொஞ்சம் சூடாக சாப்பிடுங்கள். அப்போதுதான் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பு கிடைப்பதோடு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

முக்கியமாக, இதய நோயாளிகள் குளிர்காலத்தில் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலே கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிவதோடு குளிர்காலத்தில் வரக்கூடிய இதயம் சம்மந்தமான பிரச்சனைகளையும் குறைக்கலாம்.

🔻 🔻 🔻 

கழிவறையில் செல்ஃபோன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இளைஞர்களே உஷார்..!

 கழிவறை என்பது பொது சுகாதாரத்தில் முதன்மையானதாக இருக்கிறது. மனித இனத்தின் நாகரீக வளர்ச்சியில் கழிவறை பெரும் இடத்தை பெற்றுள்ளது. நகரங்கள் வளர்ச்சி காலத்தில் வீட்டிற்கு ஒரு கழிவறை என்று வெளியில் கட்டப்பட்டு வந்தது. அதே தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுகாதார வளர்ச்சியில் ஒரு வீட்டிற்கு உள்ளேயே இரண்டு கழிவறை வரை கட்டிக்கொள்கின்றனர். கழிவறை சுகாதாரத்திற்கான ஆராய்ச்சிகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்துகொண்டு செல்கின்றனர். இருப்பினும் வளர்ச்சியுடன் சில துரிதமான பழக்கங்களும் ஒட்டிக்கொள்கின்றன.

அதில் ஒன்றுதான் கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. கழிவறைக்கு செல்லும்போது செல்போனை எடுத்து செல்வது எனும் ஒரு புதிய பழக்கம் இளைஞர்கள் இடையே நிலவி வருகிறது. இளைஞர்கள் பெரும்பாலும் கழிவறையில் செல்போனை வைத்திருக்க விரும்புகின்றனர் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன. காலைக் கடனை கழிக்கும்போது, செல்போனை கையில் வைத்திருப்பது பாக்ட்டீரியாவுக்கு தீனியாக அமையும். ஒரு தொலைபேசியின் திரையானது, ஒரு பொது கழிப்பறை இருக்கையை விட அழுக்காக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2022இல் சில விஞ்ஞானிகள் ‘டாய்லெட் ப்ளூம்’ பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது, கழிவறையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் கூடாரம் வெடித்து துளிகள் மற்றும் துகள்களாக சிதறும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது கழிவறையில், ஒரு டூத் பிரஷ் இருந்தால், மலத்தின் துகள்கள் அதனுள் ஒட்டிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

News18

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கழிப்பறையில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அதன் காரணமாக உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. இது குத பிளவுகள் மற்றும் மலக்குடல் வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

கழிப்பறை என்பது கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் என கூறப்படுகிறது. நாம் கழிப்பறை இருக்கையில் இருந்துக்கொண்டு செல்போனை ஸ்க்ரோல் செய்யும்போது, ​​நம் கைகளில் கிருமிகள் ஒற்றிக்கொள்ளும். அப்படியே கைகளை நம் வாய், கண்கள் மற்றும் மூக்கில் வைத்தால் அது பல அபாயங்களை உருவாகும்.

News18

ஒரு செல்போனின் திரையில் கிருமிகள், 28 நாட்கள் வாழலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஸ்மார்ட்போன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை கொண்டவை என்பது உறுதிசெய்யப்பட்ட உண்மையாகும். மேலும், சுகாதாரக் கண்ணோட்டத்தில், செல்போன் திரைகள் ‘டிஜிட்டல் யுகத்தின் கொசு’ என்றும், தொற்று நோய்களின் வாகனமாக இருக்கிறது என்றும் தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் டாக்டர் ஹக் ஹைடன் கூறியுள்ளார்.

கழிப்பறை இருக்கையில் பொதுவாகக் காணப்படும் கிருமிகள் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் ஆகும். இவை பெரும்பாலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இக்கிருமிகளால் ஒருவர் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடும். மேலும், இது சரும பிரச்னைகளை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கழிப்பறையை பயன்படுத்திய பிறகு நாம் அனைவரும் கை கழுவதைப் பின்பற்றுகிறோம், ஆனால் நம்மில் பலர் செல்போனை சுத்தப்படுத்துவதை தவிர்க்கிறோம். செல்போனை தினசரி ஒரு துணியால் சுத்தம் செய்யவேண்டும். செல்போனை கழிப்பறையில் பயன்படுத்துவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்துகொண்டு, இந்த பழக்கத்தில் இருந்து விடுப்பெறுங்கள்.

🔻 🔻 🔻 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஆரம்பத்திலேயே காட்டும் 5 அறிகுறிகள்..!

 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்தே மக்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த அறிகுறிகளை சுதாரித்துக்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மன அழுத்தம் அதிகரிக்கும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முதல் அறிகுறி மன அழுத்தம். உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்கிறீர்கள் எனில் அதை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையெனில் இரத்ததின் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்துவிடும். இதுதான் நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.

தொடர் தொற்றுகள் : வெள்ளை சிவப்பு அணுக்கள் குறைந்துவிட்டது எனில் நோய் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்.

சோர்வு : நோய் எதிர்ப்பு சக்தி குறையக் குறைய உடலின் ஆற்றலும் குறையும். இதனால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இரவு போதுமான தூக்கம் தூங்கியிருந்தாலும் பகலிலும் சோர்வாகவும், தூக்கம் கண்களில் இருந்துகொண்டே இருக்கும். தூங்கலாமா என உடல் ஏங்கும்.

காயங்கள் மெதுவாக ஆறும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடலில் காயங்கள் ஆறுவது தாமதமாகும். அந்த இடத்தில் காயம் மறைந்து புதிய தோல் உருவாக நீண்ட நாட்கள் ஆகும்.


மூட்டு வலி : தொடர் மூட்டு வலிகளால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் இதற்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் காரணம். மூட்டு வலி நிலையை அடைகிறீர்கள் எனில் பிரச்னை தீவிரமாகிறது என்று அர்த்தம். எனவே இதை கவனிக்காமல் விடாதீர்கள்.


🔻 🔻 🔻 

நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..? அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

 ஒரு மனிதர் உடல் அளவில் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறாரோ அதே அளவிற்கு அவரது மன ஆரோக்கியமும் இன்றியமையாதது ஆகும். மனதளவிலும், உடலளவிலும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது அது அவர்களது வாழ்விலும் அவர்களது செயல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஆன்மீகத்தை கைக்கொள்ளுங்கள்: ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மனதளவில் மிகப் பெரும் நன்மைகள் ஏற்படும். முக்கியமாக வாழ்வில் கடினமான சூழல்கள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து எவ்வாறு பக்குவமாக வெளிவருவது போன்றவை ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கைவந்த கலையாக இருக்கும். யோகாசனம், தியானம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் பெரும் மன அமைதியானது சவாலான சூழல்களில் சிறப்பாக செயல்பட உதவும்.

சமூகத் தொடர்புகள்: மனிதர்கள் தனியாக இருப்பதற்கு படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சிலருக்கு தனியாக இருந்தால்தான் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போலவே இருக்கும் ஆனாலும் கூட எப்போதுமே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனிமையில் இருந்து வெளிவந்து மற்றவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு பழகுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அது குடும்பமும், நண்பர்களும் அல்லது வேறு யாராக இருந்தாலும் கூட உங்களது மனதில் உள்ள வெற்றியை அவர்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் ஏற்பட போகின்ற நன்மைகள் தற்போது உங்களுக்கு வசதி ஆகியவற்றிற்கு மனதார கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இது வாழ்வின் மீது ஒரு பிடிமானத்தை ஏற்படுத்துவதோடு நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.


சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்: இன்று நவீன யுகத்தில் அதிலும் இணையம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக வெளிவருவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆனாலும் கூட நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வதன் மூலம் நமது மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும்: மனிதர்களின் பெரும்பாலானோர் கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் மனதில் வைத்து பயந்து கொண்டே நிகழ்காலத்தை அனுபவிக்க தவறி விடுகின்றனர். நாம் எப்போதுமே நிகழ்காலத்தில் முழுமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். தற்போது நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை முழுமையாக அனுபவித்து ஏற்றுக் கொள்வது மனதை பக்குவப்படுத்தும்.

போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்: வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒருவர் போதை பொருட்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதை தாண்டி போதைப்பொருட்களை பயன்படுத்துவது என்பது நீண்ட கால அடிப்படையில் சரி செய்யவே முடியாத சேதத்தை உண்டாக்கி விடும். குறிப்பாக இளம் வயதினர் தற்போது போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சரியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்: ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் முடிந்த அளவு தன்னுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவதும் தினசரி உடற்பயிற்சி செய்வதும் இன்றி அமையாத ஒன்றாகும். இவற்றை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சனை.. கண்டறிவது எப்படி..?

 கழுத்தில் சிறியதாக இருக்கும் ஆனால் மிக முக்கிய சுரப்பியான தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும் போது குழந்தைகளுக்கு தைராய்டு கோளாறுகள் ஏற்படுகின்றன. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

தைராய்டு கோளாறுகள் பெரியவர்களை விட குழந்தைகளை குறைந்த அளவே பாதித்தாலும், ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகளை கண்டறிவது அவசியமாகும். தைராய்டு கோளாறுகளில் ஹைபோ தைராய்டிஸம் மற்றும் ஹைபர் தைராய்டிஸம் என இரண்டு வகைகள் உள்ளது. பிறப்பிலேயே வரும் ஹைபோ தைராய்டிஸத்தை முறையாக குணப்படுத்தாவிட்டால் மனநல குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.

குழந்தை பிறந்தவுடன் தேவையான பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சை எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளிடத்தில் ஹைபர் தைராய்டிஸம் பாதிப்பு அரிதாக இருந்தாலும், உடல் எடை இழப்பு, எரிச்சல், வேகமான வளர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

News18

தைராய்டு கோளாறுகள் கவலைக்குரிய விஷயம் என்றாலும் முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதை எளிதாக குணப்படுத்த முடியும். அடிக்கடி பரிசோதனை மற்றும் குழந்தை நல மருத்துவரின் அறிவுரையை ஒழுங்காக பின்பற்றுவது மட்டுமே இப்போதைய தேவை.

தைராய்டு செயல்பாடுகளை கவனமாக கண்காணிப்பது, மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வது, முக்கியமான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையாகும். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்றவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

News18

ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தைராய்டு செயல்பாடு சரியாக இருப்பதை உறுதி செய்ய உணவில் அயோடின் அளவு எவ்வுளவு சேர்க்கிறோம் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான சிகிச்சை திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் நிலை குறித்து புரிந்துகொள்ள, அவர்களிடம் வயதுகேற்ற உரையாடல்களை அவ்வப்போது பெற்றோர்கள் நிகழ்த்த வேண்டும்.

குழந்தைகளிடத்தில் தைராய்டு பிரச்னைகள் இருப்பதை எப்படி கண்டறிவது?

நடத்தையில் மாற்றம்: குழந்தைகளின் மனநிலை திடீரென மாறுகிறதா, எரிச்சல் அடைகிறார்களா அல்லது பதட்டம் அடைகிறார்களா என்பதை கவனியுங்கள்.

உடல் எடையில் மாற்றம்: எந்தவித காரணமும் இன்றி குறிப்பிடத்தகுந்த அளவு உடலின் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.

சோர்வு: ஒழுங்காக தூங்கினாலும் காரணமேயில்லாமல் சோர்வாக, களைப்பாக உணர்வது.

மலம் கழிப்பதில் மாற்றம்: மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை தைராய்டு சுரப்பி ஒழுங்காக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

வெப்பநிலை அலர்ஜி: குழந்தைகளை பாதிக்காத வகையில் குளிரான அல்லது சூடான வெப்பநிலை இருந்தாலும் கூட, அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை என்றால் தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.

சருமம் மற்றும் தலைமுடியில் மாற்றம்: வறண்ட சருமம், முடி உதிர்வு அல்லது முடியின் அடர்த்தியில் மாற்றம் போன்றைவை தைராய்டு பிரச்னைகளோடு தொடர்புடையவை.

வளர்ச்சியில் தாமதம்: குழந்தைகள் வளர்வதில், பருவம் அடைவதில் அல்லது வேறு ஏதாவது வளர்ச்சி மைல்கல்லில் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்காணியுங்கள்.

தைராய்டு கோளாறுகளுக்கான பரிசோதனை:

இந்த அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் தொடர்ச்சியாகவோ அல்லது கவலைக்குரியதாகவோ காணப்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தைராய்டு செயல்பாடு டெஸ்ட், ரத்த பரிசோதனை, தைராய்டு ஹார்மோன் (T3, T4) மற்றும் தைராய்டை தூண்டும் ஹார்மோனின் அளவை கணக்கிடுதல் போன்ற பரிசோதனைகளை குழந்தை நல மருத்துவர் பரிந்துரைப்பார். சில சமயங்களில் தைராய்டு சுரப்பியின் ஸ்ட்ரக்ட்சரை மதிப்பிட அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

🔻🔻🔻

NLC Jobs; என்.எல்.சி. வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் தகுதிக்கு 632 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

  

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோடிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 314

Mechanical Engineering - 75

Electrical Engineering - 78

Civil Engineering – 27

Instrumentation Engineering - 15

Chemical Engineering - 9

Mining Engineering – 44

Computer Science and Engineering - 47

Electronics & Communication Engineering – 5

Pharmacist - 14

கல்வித் தகுதி2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்

உதவித் தொகை; ரூ. 15,028

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 318

Mechanical Engineering - 95

Electrical Engineering - 94

Civil Engineering - 49

Instrumentation Engineering - 9

Mining Engineering - 25

Computer Science and Engineering - 38

Electronics & Communication Engineering - 8

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 12,524

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2024 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 06.02.2024 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரிThe General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 607 803.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20-GAT%20&TAT-2023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.




🔻🔻🔻