Search

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.7,000/- ஊக்கத்தொகையில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் University Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 12.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் University Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

 University Research Fellow கல்வி தகுதி:

University Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Physics, Material Science பாடப்பிரிவில் PG Degree, Ph.D முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

University Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

 University Research Fellow ஊக்கத்தொகை:

University Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

University of Madras தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 15.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

University Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் ரூ.200/- ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்திய ரசீதையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.


🔻🔻🔻

PNB வங்கியில் 1025 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.78,230/- || டிகிரி தேர்ச்சி போதும்!

 Officer, Manager, Senior Manager ஆகிய பணிகளுக்கென பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB Bank) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 1025 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் 07.02.2024 அன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பஞ்சாப் தேசிய வங்கி காலிப்பணியிடங்கள்:

பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB Bank) காலியாக உள்ள 1025 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Officer – 1000 பணியிடங்கள்
  • Manager – 20 பணியிடங்கள்
  • Senior Manager – 05 பணியிடங்கள்

PNB Bank கல்வி தகுதி:

CA, CMA, CFA, MBA, Post Graduate Diploma, BE, B.Tech, MCA, M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது AICTE / UGC அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் படித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

PNB Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Officer – 21 வயது முதல் 28 வயது வரை
  • Manager – 25 வயது முதல் 35 வயது வரை
  • Senior Manager – 27 வயது முதல் 38 வயது வரை
  • PNB Bank சம்பளம்:

    இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.36,000/- முதல் ரூ.78,230/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

    PNB Bank தேர்வு முறை:

    இந்த PNB வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    PNB Bank விண்ணப்ப கட்டணம்:

    • SC / ST / PWBD – ரூ.59/-
    • மற்ற நபர்கள் – ரூ.1180/-

    PNB Bank விண்ணப்பிக்கும் முறை:

    விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 07.02.2024 அன்று முதல் 25.02.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.



🔻🔻🔻

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை – JRF பணிக்கு ரூ.37,000/- சம்பளம்!

 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 23.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 23.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பதாரர்கள் NET – JRF / LS, GATE தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Junior Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Junior Research Fellow சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.37,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு முறை:

இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து drmkumari@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 23.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.


🔻🔻🔻

Accenture ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 ஆக்சென்ச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (Accenture India Pvt. Ltd) காலியாக உள்ள Full Stack Engineer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தனியார் துறை வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

Full Stack Engineer  பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accenture முன் அனுபவம்:

5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:

Written Test (Aptitude)

Technical

HR

Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Download Notification




🔻🔻🔻

Army Public School வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பிக்க..!

 ராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள Principal பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

APS காலிப்பணியிடங்கள்:

Principal பதவிக்கு என 33 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் MDS  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.05.2024 தேதியின் படி, அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

AWES வழிகாட்டுதல்களின்படி, ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து acds.careers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf




🔻🔻🔻

SAIL நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

 Steel Authority of India Limited-ல் (SAIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Doctor (GDMO) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

SAIL காலியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் Doctor (GDMO) பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Doctor (GDMO) கல்வி விவரம்:  

இப்பணிக்கு அரசு அல்லது MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

SAIL வயது விவரம்:

Doctor (GDMO) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.02.2024 அன்றைய நாளின் படி, 69 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Doctor (GDMO) ஊதிய விவரம்:  

இந்த SAIL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctor (GDMO) விண்ணப்பிக்கும் விதம்:

Doctor (GDMO) பணிக்கென 16.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு ஜார்கண்டில் உள்ள SAIL நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: ரூ.50,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 Guest Faculty (Applied Psychology) பணிக்கென தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் உடேன விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

Guest Faculty (Applied Psychology) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி:  

இந்த CUTN பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் applied Psychology பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் NET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Guest Faculty வயது:

Guest Faculty (Applied Psychology) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Guest Faculty மாத ஊதியம்:  

இந்த CUTN பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

CUTN தேர்வு முறை:

Guest Faculty (Applied Psychology) பணிக்கு தகுதியான நபர்கள் 12.02.2024 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CUTN விண்ணப்பிக்கும் முறை:

இந்த CUTN பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து hodpsychology@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

சென்னையில் ரூ.80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

 ICMR கீழ் இயங்கி வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) ஏற்பட்டுள்ள Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant) ஆகிய பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு சரியான நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது Interview-ல் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant), Project Data Entry Operator Grade B, Senior Project Assistant (UDC) மற்றும் Project Multi-Tasking Staff (Helper) பதவிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10th + Diploma (MLT/DMLT)/ 12th in Science + Diploma (MLT/DMLT) + Five Years Experience in relevant subject /field/ MBBS with MPH/PhD/ முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு  பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ18,000/- முதல் ரூ.80,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIRT தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள  நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR-NIRT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIRT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link



🔻🔻🔻

தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் வேலைவாய்ப்பு – 1933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

 தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காலியாக உள்ள 1933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

தமிழக அரசு அறிவிப்பு:

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இங்கு காலியாக உள்ள 1,933 பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவை அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 29 மற்றும் 30ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻

ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 – ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

 முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில்  DEO, Clerk, Medical Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின்  வாயிலாக உங்கள் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.

ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Officer-In-Charge – 2 பணியிடங்கள்
Gynaecologist – 1 பணியிடம்
Radiologist – 1 பணியிடம்
Medical Specialist – 1 பணியிடம்
Medical Officer – 5 பணியிடங்கள்
Physiotherapist – 1 பணியிடம்
Radiographer – 2 பணியிடங்கள்
Nursing Assistant – 1 பணியிடம்
Lab Technicain – 1 பணியிடம்
Dental Officer 3
Data Entry Operator – 1 பணியிடம்
Clerk – 1 பணியிடம்
Chowkidar – 2 பணியிடங்கள்
Female Attendant – 1 பணியிடம்
Safaiwala – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 8th, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, DMLT, Literate, MBBS, MD, MS, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Officer-In-Charge – ரூ.75,000 per month
Gynaecologist – ரூ.1,00,000 per month
Radiologist – ரூ.1,00,000 per month
Medical Specialist – ரூ.1,00,000 per month
Medical Officer – ரூ.75,000 per month
Physiotherapist – ரூ.28,100 per month
Radiographer – ரூ.28,100 per month
Nursing Assistant – ரூ.28,100 per month
Lab Technician – ரூ.28,100 per month
Dental Officer – ரூ.75,000 per month
Data Entry Operator – ரூ.16,800 per month
Clerk – ரூ.19,700 per month
Chowkidar – ரூ.16,800 per month
Female Attendant – ரூ.16,800 per month
Safaiwala – ரூ.16,800 per month

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

சென்னை TCS ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 சென்னையில் உள்ள TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள ETL Testing பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து  B.E   படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

3 முதல் 12 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள்  கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 30.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf




🔻🔻🔻

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால் என்னவாகும் தெரியுமா? அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

 இன்றைய துரிதமான உலகில் உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது என்று பல தவறுகளை செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் கார்பனேடட் பானங்கள் அல்லது காஃபின் பானங்கள் போன்றவற்றை அருந்துகின்றனர். இது தங்களுக்கு உடனடி ஆற்றலை தருவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மையை தராது.

கார்பனேடட் பானங்களை அருந்துவதன் மூலமாக நம் உடலில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.

News18

அதிக காஃபின் கொண்ட பானம் ஒன்றை அருந்தும்போது அதன் பாதிப்புகள் சில நிமிடங்கள் தொடங்கி, பல நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும். சராசரியாக ஒரு 500 மில்லி கொண்ட குளிர்பானத்தில் 160-200 mg அளவில் காஃபின் அளவு இருக்கும். இது நாம் அருந்துகின்ற ஒரு கப் காஃபியை காட்டிலும் கூடுதலாகும்.

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பானம் அருந்திய அடுத்த 15 முதல் 45 நிமிடங்களில் ரத்த நாளங்களில் காஃபின் அளவு மிகுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் நம்முடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

News18

பானம் அருந்திய 30 முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகு நமது ரத்த நாளங்கள் காஃபினை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் நம்முடைய ரத்த நாளங்களில் சர்க்கரை மிகுதியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஃபின் அளவுகள் குறையும் என்றாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பது மறையாது.

தோராயமாக காஃபின் பானம் அருந்திய 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, நமது உடல் அதில் பாதி அளவை மட்டுமே வெளியேற்றியிருக்கும். எனினும், நம்முடைய வயது மற்றும் உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இது மாறும். இறுதியாக 12 மணி நேர முடிவில் காஃபின் தன்மை உடலில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

காஃபின் பானம் அருந்திய பிறகு 12 முதல் 24 மணி நேர இடைவெளிக்குள் உங்களுக்கு தலைவலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம். காஃபின் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்குவதற்கு தோராயமாக 7 முதல் 12 நாட்கள் ஆகலாம். ஆக, அடுத்தமுறை காஃபின் பானம் அருந்துகின்ற எண்ணம் தோன்றும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻 

குளிர்காலத்தில் அதிகரிக்கும் காது வலி.. இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

 

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து எங்கும் இதமான சூழலை ஏற்படுத்தினாலும், இந்த சமயத்தில் பலருக்கும் காது வலி என்ற தொந்தரவும் கூடவே சேர்ந்து வருகிறது. வெப்பநிலை குறைவதன் காரணமாக நமது உடலில் சாதாரண தொந்தரவு முதல் தொற்றுகள் வரை என பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நமக்கு ஏற்படும் அசௌகர்யங்களை தவிர்க்க முடியும். அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

வெதுவெதுப்பை தரும் தொப்பி அணியுங்கள் : குளிர் காற்றிலிருந்து உங்கள் காதுகளை பாதுகாப்பதற்கான எளிய வழி தொப்பி அணிவது மட்டுமே. அதிக தரமுள்ள, உங்கள் காதுகாதுகளுக்கு நன்கு பொருந்தக்கூடிய, குளிர் காற்று உள்ளே செல்லாதவாறு தடுக்கக்கூடிய தொப்பியாக பார்த்து வாங்குங்கள். கம்பளி துணியாக இருந்தால் மிக நல்லது. குறைவான வெப்பநிலையில் காதுகளை மூடுவதன் மூலம் காது வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மஃப்ளர்: தொப்பியுடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பிற்கு மஃப்ளர் பயன்படுத்துங்கள். உங்கள் கழுத்தைச் சுற்றி மஃப்ளரை பயன்படுத்துவதால் நடுங்கும் குளிரிலிருந்து உங்கள் காதுகள் பாதுகாக்கப்படும். இந்த மஃப்ளர் உங்கள் காதுகளுக்கு தேவையான பாதுகாப்பை தருவதோடு உங்களை ஸ்டைலிஷாகவும் வெளிப்படுத்தும்.

உடனடி சிகிச்சை அவசியம் : குளிர்காலத்தில் வரக்கூடிய சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காது வலியை அதிகப்படுத்திவிடும். மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிந்தால், காதுகளுக்கு தொற்று பரவாமல் இருக்க உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அறிகுறிகளை போக்க நன்றாக நீர் அருந்துங்கள், நன்றாக தூங்குங்கள். தேவைப்பட்டால் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி பயன்படுத்துங்கள்.

காதுகளை ஈரப்படுத்துங்கள் : குளிரான வெப்பநிலை நமது சருமத்தை வறண்டு போக வைக்கும். இதில் காதும் விதிவிலக்கல்ல. எண்ணெய் அல்லது மிதமான ஹைபோ அலர்ஜெனிக் லோஷன் காதுகளுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. வெளிப்புற காதில் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதிகளிலும் இந்த லோஷனை பயன்படுத்துங்கள். சருமத்தில் ஈரப்பதம் இருப்பதால் எரிச்சல் ஏற்படுவது குறைவதோடு காதுகளும் ஆரோக்கியம் பெறுகிறது.

எந்நேரமும் காதை சுத்தப்படுத்தாதீர்கள் : காதுகளின் சுகாதாரத்தை பேணுவது அவசியம் என்றாலும், அதிகப்படியாக சுத்தம் செய்வதால் காதுகளில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் குறைந்து நமக்கு அசௌகர்யத்தை தருகிறது. காதுகளின் வெளிப்புறத்தை மென்மையாக சுத்தப்படுத்துங்கள். காதிற்குள் எந்தப் பொருளையும் நுழைத்து சுத்தம் செய்யாதீர்கள். அப்போதுதான் காதுகளுக்குள் இயற்கையாகவே இருக்கும் தடுப்பாண்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததோடு குளிர்காலத்தில் காது வலி வரும் ஆபத்தும் குறையும்.

குளிர்காலத்தில் இதுபோன்ற எளிமையான முறைகளை பின்பற்றுவதால் காதுகளுக்கு வரக்கூடிய ஆபத்தை குறைக்க முடியும். நாங்கள் கூறிய டிப்ஸ்களை பின்பற்றி எந்தவித காது வலியும் இன்றி குளிர்கால அழகை ரசியுங்கள்.


🔻 🔻 🔻