Search

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகம் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னணி கல்வி நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

Engineer Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.E/ B.Tech/ MCA/ MSc (CS/IT) படித்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள்

 பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி 

வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 37,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் 

பக்கம் மூலமாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய

 https://www.nitt.edu/home/other/jobs/CSG-NITT-Engineer-Trainee.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻

IDBI Bank Jobs: ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும்.

 நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் 

இளநிலை உதவி மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 

அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.02.2024 ஆகும்.

Junior Assistant Manager

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை 

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.31.2024 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு 

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள்

கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள்ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள்பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 

200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும்

 ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு 

https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx 

என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200

மற்றவர்களுக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 37 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

AYUSH Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : BSMS/BHMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000 - 40,000

Dispenser (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 750 (தினசரி)

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Multipurpose Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 300 (தினசரி)

Lab Tech Gr III

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை

 பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட 

முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரகம் 

பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி - 635115

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

திருச்சியில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

Project Assistant & Associate பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சம்பள விவரம்:

Project Associate – ரூ. 35,000/-
Project Assistant – ரூ.  15,000/-

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  ME/M.Tech, Post Graduation Degree படித்தவர்கள் Project Associate பதவிக்கும், BE/B.Tech, Degree, Diploma படித்தவர்கள் Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், சிவில் இன்ஜினியரிங் துறை, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-620015-ல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, உரிய சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள், தரம்/மதிப்பெண்கள், கேட், பயோடேட்டா போன்றவற்றின் அசல் மற்றும் புகைப்பட நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.


🔻🔻🔻

சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.20800/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Deputy Chief Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 2 பணியிடங்கள்  காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Deputy Chief Engineer பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.160000 – 400 – 20800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  28.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – சம்பளம்: ரூ.21,000/-

 அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Research Assistant பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 26.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் காலியிடங்கள்:

Research Assistant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Research Assistant கல்வி:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, ME, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Research Assistant வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Research Assistant மாத ஊதியம்:

Research Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.21,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Research Assistant தேர்வு செய்யும் விதம்:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் src@auist.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

சென்னை TCS நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

 தனியார் IT நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Business Analyst பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Business Analyst கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Business Analyst அனுபவ விவரம்:

Business Analyst பணிக்கு 06 முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Business Analyst பிற தகுதி:

  • Core Java
  • Functional programming
  • Strong Business Analysis

TCS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 18.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

தமிழக KVK நிறுவன வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.56100/-

 அரியலூர் க்ரிஷி விக்யான் கேந்திரா, ஆனது காலியாக உள்ள  அனைத்து பதவிகளுக்கும் ஆன வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, SMS (Animal Science) மற்றும்  Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.KVK காலிப்பணியிடங்கள்:

SMS (Animal Science) மற்றும்  Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து SMS (Animal Science) பதவிக்கு Master’s degree யும் Stenographer (Grade –III) பதவிக்கு 12 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KVKசம்பள விவரம்:

SMS (Animal Science) – ரூ.56100/- (Level 10)
Stenographer (Grade –III) – ரூ. 25500/- (Level 4)

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
General விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் வேலை வாய்ப்பு; 300 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 300

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் 

இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், 

வயது சலுகை உண்டு.

சம்பளம்: 37,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு 

என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 

இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் 

கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். 

இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் 

என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. 

முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு 

அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். 

முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 

250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 

இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsonline.ibps.in/niacljan24/ என்ற இணையதள பக்கத்தில்

 விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS 

பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://www.newindia.co.in/assets/docs/recruitment/RECRUITMENT-OF-ADMINISTRATIVE-OFFICERS2023/DETAILED%20ENGLISH%20ADVERTISEMENT%20-%20ASSISTANT%20RECRUITMENT%202023.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

தென்காசி இளைஞர்களுக்கான நற்செய்தி..!! சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

 தென்காசியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சியில் 17.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் 2 .00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8- வகுப்பு முதல் முதுகலை பட்டதாரி வரை (B.E, Diploma, Nursing, ITI( படித்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivate jobs.tn.gov.in என்ற தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram channelல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு TENKASI EMPLOYMENT OFFICE என search செய்தால் எங்கள் அலுவலக Channel தோன்றும். அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் Channel-ல் இணையலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

🔻🔻🔻



🔻🔻🔻