Search

TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023)

 TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023)Today We are going to share notes TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023) PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download notes

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள்

இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள்

Today We are going to share notes இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள் PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD NOTES


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)

TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)

Today We are going to share notes TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)) PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD NOTES


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.30,000/- ஊதியம்!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate I  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate I பதவிக்கென ஒரு பணியிடம்  காலியாக உள்ளது.

கல்வி விவரம்:  

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில்  BE, B.Tech கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Associate I  பதவிக்கு என ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 06.03.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigators  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 1 பணியிடம்   காலியாக உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள்  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUTN காலிப்பணியிடங்கள்:

Field Investigators பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

மத்திய பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 55 % மதிப்பெண்களுடன் Post Graduate in Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 15.03.2024 க்குள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Accenture ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 ஆக்சென்ச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (Accenture India Pvt. Ltd) காலியாக உள்ள Customer service New Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தனியார் துறை வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.Accenture காலிப்பணியிடங்கள்:

Customer service New Associate பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Accenture முன் அனுபவம்:

1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:

Written Test (Aptitude)

Technical

HR

Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSC Phase XII 2024 அறிவிப்பு வெளியீடு – 2049 காலியிடங்கள் || கல்வி, வயது…. விவரங்கள் இதோ!

 

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள SSC Phase XII தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மூலம் Group C, Group D பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2049 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.SSC Phase XII 2024 தேர்வு விவரங்கள்:

SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் SSC Phase XII தேர்வு மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Group C, Group D பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள SSC Phase XII 2024 தேர்வுக்கான அறிவிப்பானது 26.02.2024 அன்று https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC Phase XII 2024 காலியிடங்கள்:

SSC Phase XII தேர்வுக்கென மொத்தமாக 2049 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


SSC Phase XII 2024 கல்வி விவரம்:

இத்தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

SSC Phase XII 2024 வயது விவரம்:

SSC Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 42 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC / ESM – 03 ஆண்டுகள், PWBD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

SSC Phase XII 2024 தேர்வு செய்யும் முறை:

Computer Based Examination (CBE)

Skill Test / Computer Proficiency Test

Document Verification

Medical Examination

மேலும் SSC  Phase XII எழுத்து தேர்வானது மே மாதம் 06ம் தேதி முதல் 08ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSC Phase XII 2024 விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.100/-

SSC Phase XII 2024 விண்ணப்பிக்கும் வழிமுறை:

SSC  Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 26.02.2024 அன்று முதல் 18.03.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் ரூ.79,040/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 PGIMER ஆணையம் ஆனது Project Research Scientist, Project Technical Support-III, DEO பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.PGIMER காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist, Project Technical Support-III, DEO பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Research Scientist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.79,040/- மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  அதிகாரபூர்வ முகவரிக்கு 29.02.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் End Point Security (Symantec) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, End Point Security (Symantec) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

End Point Security கல்வி:

End Point Security (Symantec) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் M.Sc, ME, M.Tech, MBA, MBE டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TCS அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


End Point Security பணியமர்த்தப்படும் இடம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS தேர்வு செய்யும் விதம்:

End Point Security (Symantec) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, கலந்தாய்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

End Point Security விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 30.06.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Chief Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Vice President / Assistant Vice President, Chief Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHLML ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Vice President / Assistant Vice President, Chief Manager  ணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Post Graduate Degree in HR என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHAI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45,50 மற்றும் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Advisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  hr.nhlml@nhai.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – ரூ.18,536/- மாத ஊதியம்!

 Social Worker பணிக்கென தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Thanjavur DCPU) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,536/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தமிழக அரசு பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம்  மட்டுமே காலியாக உள்ளது.

Social Worker கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Social Worker அனுபவ காலம்:

Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Social Worker வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Social Worker சம்பளம்:

இந்த DCPU சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,536/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

DCPU தேர்வு முறை:

Social Worker பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 04.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10 பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?

 தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. தினமும் காலையில் இதை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு புத்துணர்ச்சியும் தருகிறது. தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சையை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்களை இங்கே பார்க்காலம்…


ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. இது உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை தடுத்து ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மூலம் செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.


செரிமானத்திற்கு நல்லது : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகமன நார்ச்சத்து உள்ளது. ஆகையால் இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் குறைந்து மலம் கழிப்பது சீராகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து என பல வைட்டமின்களும் மினரல்ஸ்களும் உள்ளது. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நோய் தொற்றுகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

ஆற்றலை அதிகப்படுத்துகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இருக்கும் இயற்கையான சர்க்கரை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக தருகிறது. இதை தினமும் காலையில் சாப்பிடும் போது வயிறு நிறைந்த திருப்தி கிடைப்பதோடு அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

இதய நலன் : ஊற வைத்த உலர் திராட்சையில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உங்கள் ரத்த அழுத்தம் ஒழுங்குப்படுத்த உதவுவதோடு இதய நலனை பாதுகாக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம் : ஊற வைத்த உலர் திராட்சையில் கால்சியம் மற்றும் போரான் அதிகளவு உள்ளது. இது நம் எலும்புகள் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் எலும்புப்புரை நோய் தாக்கும் அபாயமும் குறைகிறது.

சரும ஆரோக்கியம் மேம்படுகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி இருப்பதால், நம் உடலில் கொலஜன் உற்பத்தியாக தூண்டுவதோடு இளமையான தோற்றத்தையும் பளபளப்பான சருமத்தையும் தருகிறது.

ரத்தசோகை குணமாகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாகும். இதை சாப்பிடுவதால் அவர்களின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடை பராமரிப்பு : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகமான நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டுமென விரும்புகிறவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

மனநிலையை உற்சாகப்படுத்துகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரையும் செரோடோனினும் இருப்பதால் உங்களது பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்து மனதை சந்தோஷமாக வைத்திருக்க உதவுகிறது.

🔻 🔻 🔻 

அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. டயட்டில் சேர்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!

 பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் சத்தான பழங்கள் உள்ளூர் மார்கெட்டில் ஏராளமாக இருக்கின்றன.

இதில் முக்கியமான ஒரு பழமாக இருக்கிறது அன்னாசிப்பழம். இந்த பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பிற சேர்மங்கள் உள்ளன. அன்னாசிப்பழங்களும் அதிலிருக்கும் கலவைகளும் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது மற்றும் காயங்களில் இருந்து மீள்வது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

அன்னாசிப்பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது.


அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் (bromelain) போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் அழற்சி எதிர்ப்பு அதாவது ஆன்டி-இன்ஃபளமேட்ரி பண்புகளை கொண்டுள்ளது.


அன்னாசியில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

அன்னாசிப்பழங்களில் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகிறது. இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. தோராயமாக 165 கிராம் சிங்கிள் கப் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் உள்ளது.

அன்னாசி பழங்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கிறது. எனவே இந்த பழங்கள் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தவிர இந்தச பழங்களில் காணப்படும் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவையும் கூட இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சத்துக்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

அன்னாசி பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நம்முடைய உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.

அன்னாசி பழங்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. எனவே இந்த பழம் தங்களது எடையைக் கட்டுப்படுத்த நினைப்போருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. உங்கள் பசியை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் உதவுகிறது.

அன்னாசி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க இது உதவ கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.



🔻 🔻 🔻