Search

BOB வேலைவாய்ப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை || இறுதி வாய்ப்பு!

 BOB Financial நிறுவனம் Senior Officer/Officer, AVP/Manager பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து  வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB வேலைவாய்ப்பு 2024:

Senior Officer/Officer, AVP/Manager பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Graduate / Post Graduate / Professional Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 12 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Assistant Chef பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Chef பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Chef கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Hotel Management / Diploma / BSC / BA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Chef ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notifiaction PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.3,40,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 ரூ.3,40,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BEML Limited ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEML Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.


Director கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEML Limited வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEML Limited தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.31,000/- || தேர்வு கிடையாது!

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.31,000/- || தேர்வு கிடையாது!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow / Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow/ Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதிய விவரம்:

JRF – ரூ.31,000/-

PA – ரூ.25,000/-

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.03.2024ம் தேதிக்குள் mannimaran.che@pondiuni.edu.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

UPSC Officer வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 UPSC Officer வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Anthropologist, Assistant Keeper, Scientist ‘B’, Research Officer/Planning Officer, Assistant Mining Geologist, Assistant Mineral Economist (Intelligence), Economic Officer & Senior Lecturer/ Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 09.03.2024 முதல் 28.03.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC காலிப்பணியிடங்கள்:

1. Anthropologist (Cultural Anthropology Division) – 08 பணியிடங்கள்
2. Assistant Keeper – 01 பணியிடம்
3. Scientist ‘B’ (Computer Science/Information Technology) – 03 பணியிடங்கள்
4. Research Officer/Planning Officer – 01 பணியிடம்
5. Assistant Mining Geologist – 01 பணியிடம்
6. Assistant Mineral Economist (Intelligence) – 01 பணியிடம்
7. Economic Officer – 09 பணியிடங்கள்
8. Senior Lecturer/ Assistant Professor (Anaesthesiology) – 03 பணியிடங்கள்
9. Senior Lecturer/Assistant Professor (Radio- Diagnosis) – 01பணியிடம்

என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC வயது வரம்பு:

28.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Anthropologist (Cultural Anthropology Division) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
2. Assistant Keeper – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
3. Scientist ‘B’ (Computer Science/Information Technology) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
4. Research Officer/Planning Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
5. Assistant Mining Geologist – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
6. Assistant Mineral Economist (Intelligence) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
7. Economic Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
8. Senior Lecturer/ Assistant Professor (Anaesthesiology) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA.
9. Senior Lecturer/Assistant Professor (Radio- Diagnosis) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA.

UPSC தேர்வு செயல் முறை:

1. Recruitment Test
2. Interview

விண்ணப்ப கட்டணம்:

Female/SC/ST/Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 09.03.2024 இல் தொடங்கி 28.03.2024 @ 06.00 PM மணிக்கு முடிவடையும்.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.56900/- ஊதியத்தில் கல்லூரி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 மாதம் ரூ.56900/- ஊதியத்தில் கல்லூரி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி வெலிங்டன் (நீலகிரி) காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DSSC Wellington காலிப்பணியிடங்கள்:

Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.


MTS கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18000- 56900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

DSSC தேர்வு செயல் முறை:

1. Written Test
2. Skill Test


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2024 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2024 – 239 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தொழில்துறை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 239 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 20.03.2024 முதல்19.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NLC இந்தியா காலிப்பணியிடங்கள்:

  • Industrial Trainee/SME & Technical (O&M) – 100 பணியிடங்கள்
  • Industrial Trainee (Mines & Mines Support Services) – 139 பணியிடங்கள்

என மொத்தம் 239 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01/03/2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் UR/EWS விண்ணப்பத்தார்களுக்கு 37, OBC(NCL) விண்ணப்பத்தார்களுக்கு 40 மற்றும் SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Industrial Trainee தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

Industrial Trainee/SME & Technical (O&M) சம்பள விவரம்:

  • 1st Year – ரூ.18,000/-
  • 2nd Year – ரூ.20,000/-
  • 3rd Year – ரூ. 22,000/-

Industrial Trainee (Mines & Mines Support Services)  சம்பள விவரம்:

  • 1st Year – ரூ.14,000/-
  • 2nd Year – ரூ.16,000/-
  • 3rd Year – ரூ. 18,000/-

விண்ணப்பிக்கும் முறை:

www.nlcindia.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.03.2024 முதல்19.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Lungs Detox : காற்று மாசுபாட்டிலிருந்து உங்கள் நுரையீரலை பாதுகாக்க வீட்டிலேயே செய்ய கூடிய சில வைத்தியங்கள்!

 

காற்று மாசுபாடு நம் உடலில் பல உடல்நல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமானது நுரையீரல் பாதிப்பு. காற்று மாசுபாட்டின் முதல் ஆபத்து நுரையீரல் பிரச்சினைகள். ஆனால் அதற்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மிகப்பெரிய பிரச்சனை காற்று மாசுபாடு. இந்தியாவின் தலைநகர் தில்லி தொடங்கி பல நகரங்கள் காற்று மாசுபாட்டால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றன. இந்த விஷயத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இதனால் மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் மனிதர்களாகிய நாம்தான்.

காற்று மாசுபாடு நம் உடலில் பல உடல்நல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமானது நுரையீரல் பாதிப்பு. காற்று மாசுபாட்டின் முதல் ஆபத்து நுரையீரல் பிரச்சினைகள். ஆனால் அதற்கு நீங்கள் முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். காற்று மாசுபாட்டிலிருந்து நுரையீரலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

காலையில் வெளியே செல்ல வேண்டாம்

காற்று மாசுபாட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் வழி, முடிந்தவரை வெளியில் செல்லாமல், மாசுபட்ட காற்றை சுவாசிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான். குறிப்பாக அதிகாலை நேரங்களில் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

வீட்டில் உடற்பயிற்சி செய்யுங்கள்

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது வழக்கத்தை விட அதிக காற்றை சுவாசிக்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெளியில் உடற்பயிற்சி செய்தால்.. அதிக காற்று உள்ளிழுக்கப்பட்டு மாசுபட்ட காற்று உள்ளே செல்லும். குழந்தைகளை அதிகாலையில் வெளியே செல்ல விடாதீர்கள், அது அவர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

வெளியே செல்வதற்கு முன் காற்று மாசுபாட்டின் அளவைக் கணக்கிடுவது முக்கியம். நீங்கள் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசிக்கிறீர்கள் என்றால், வெளியே செல்வதற்கு முன் காற்றில் எவ்வளவு புகை மூட்டம் இருக்கிறது என்பதைச் சரியாகச் சரிபார்க்கவும். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முகமூடி எது முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

முகமூடியால் மூக்கை மூடுவது காற்று மாசுபாட்டிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் அறியாதவர். சிறிய முகமூடிகள் காற்று மாசுபாட்டிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று நினைக்க வேண்டாம். எந்த மாசு எதிர்ப்பு முகமூடி உங்களைப் பாதுகாக்கும் என்பதை கவனமாக ஆய்வு செய்து வாங்க வேண்டும்.

உங்கள் தொலைபேசியில் காற்றின் தர சோதனை பயன்பாட்டைப் பதிவிறக்கவும். இந்த ஆப் மூலம் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் காற்றின் தரத்தை சரிபார்க்கலாம்.

இதைச் செய்வதன் நன்மைகள்

வெல்லம் சாப்பிடுவது மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உங்கள் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. வெல்லம் ஒரு இயற்கை சுத்திகரிப்பு மற்றும் வெல்லம் சாப்பிடுவது ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளின் அறிகுறிகளை குணப்படுத்தும். இது பெரும்பாலான ஒவ்வாமைகளை குணப்படுத்துகிறது.

யூகலிப்டஸ் எண்ணெய் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலம் உங்கள் சுவாசப்பாதையில் உள்ள அடைப்புகளை அகற்ற முடியும்.

காற்று மாசுபாடு காரணமாக தொண்டையில் பிரச்சனைகள் ஏற்படும் போது, ​​இஞ்சி மற்றும் துளசியை பயன்படுத்தி தொண்டை பிரச்சனைகள் குணமாக்கலாம்.

தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். சில செடிகளை வீட்டில் வளர்ப்பது நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க உதவும். மூங்கில், புளியமரம் போன்றவற்றை உங்கள் வீட்டில் வளர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது நீங்கள் சுவாசிக்கும் காற்றை வடிகட்டுகிறது. அதன் தரத்தை மேம்படுத்துகிறது.
சுவாசப்பிரச்சனை அதிகம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.



🔻 🔻 🔻 

Food: பரீட்சையின் போது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்?

 

பரீட்சையின் போது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்க வேண்டும் என பார்க்கலாம்.பரீட்சையின் போது ​​பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மனநலம் பாதிக்காத உணவுகளை போட வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சரிவிகித உணவை வழங்குவது மிகவும் அவசியம்.


சரியான ஊட்டச்சத்து வழங்கப்பட்டால் அவர்களின் அறிவாற்றல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய ஓய்வும், சத்தான உணவும் கொடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் காரணமாக நினைவாற்றலும், செறிவும் அதிகரித்து மனதளவில் சுறுசுறுப்பாக இருக்கும்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகளின் போது என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களால் அவர்கள் பெறும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

விதைகள்

அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், பாதாம், பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. அவை துத்தநாகத்தையும் வழங்குகின்றன. இவை குழந்தைகள் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இது அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் பங்களிக்கிறது.

இலை காய்கறிகள்

கீரை போன்ற கீரைகளில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கின்றன. மேலும் நினைவாற்றலை மேம்படுத்தி சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ் அதிக நார்ச்சத்து, குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு. அவை மெதுவாக ஆற்றலை வெளியிடுகின்றன. அதனால் குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதனால் அவற்றை காலை உணவாக கொடுப்பது நல்லது. மேலும் அவை செறிவை பாதிக்கின்றன.

தினை

தினை மற்றும் பஜ்ரா போன்ற தினைகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. இந்த தானியங்கள் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. எனவே இவை பல்வேறு சமையல் குறிப்புகளில் சேர்க்கப்படலாம். இவை கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. இதனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

பருப்பு வகைகள்

கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் முளைகள் உடலுக்கு ஆற்றலை அளித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். குழந்தைகள் கவனம் செலுத்தவும் உதவுகிறது. அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க குழந்தைகளின் உணவில் இவற்றை சேர்க்க வேண்டும்.

கோதுமை போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.

அதுமட்டுமின்றி இனிப்பு பசியை குறைக்கிறது. எனவே இந்த உணவுகளை பரீட்சைகளில் இருந்து கவனத்தை சிதறடிக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் தங்கள் உணவில் இந்த சத்தான உணவுகளை தவறாமல் உட்கொள்வதை பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும்.



🔻 🔻 🔻 

Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னையால் அவதியா? பாதிப்புக்களை குறைக்கும் வழிகள் – வழிகாட்டும் ஆராய்ச்சி!

 

Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னையால் அவதியா? பாதிப்புக்களை குறைக்கும் வழிகள் – வழிகாட்டும் ஆராய்ச்சி!நமது மாறிவிட்ட வாழ்க்கை சூழலில், இன்று நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்று தெரிந்துகொண்டு அதை கடைபிடிப்பது அவசியம். இன்று பலர் ஃபேட்டி லிவர் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை சுட்டிக்காட்டும் ஆராய்ச்சி குறித்து அறிந்துகொள்ளுங்கள். 

இந்திய அளவில் உடலுழைப்பு அதிகம் இல்லாமலும், உணவு முறைகளில் மாற்றம் ஏற்பட்டு அதிக கொழுப்புள்ள உணவு வகைகள் அதிகம் சேர்க்கப்படுவதாலும், பிற காரணங்களாலும், ஈரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது MASH-Metabolic Dysfunction Associated SteatoHepatitis-25-30 இந்தியர்களுக்கு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஈரலின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு (ஈரல் செயலிழப்பு, ஈரல் சுருக்கம், Liver Cirrhosis) ஏற்படுகிறது.

சென்னை தனியார் மருத்துவமனையில் 3 லட்சம் பேர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 30-50 வயதிற்கு இடைப்பட்ட 38 சதவீதம் பேர்களுக்கு ஈரலில் அதிக கொழுப்பு இருப்பது (Fatty Liver) தெரியவந்துள்ளது.

15 வயதிற்கு கீழ் உள்ள 25 சதவீதம் பேருக்கும் ஈரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்திருப்பதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாராயம் தவிர்த்து, அதிக உடல்பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு போன்றவையே ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

ஈரலில் அதிக கொழுப்பு இருக்கும் 25 சதவீதம் பேருக்கு ஈரல் செயலிழப்பும், 8 முதல் 10 சதவீதம் பேருக்கு ஈரல் சுருக்கமும் (Liver Cirrhosis) ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆரம்ப கட்ட, ஈரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துள்ள நோயில் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருப்பதால், நோயை ஆரம்பத்தில் கண்டறிய புதுவகை உபகரணங்கள் வந்துள்ளது. (ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630 கருவி).

இதன் மூலம் ஈரலில் சிறு பகுதியை வெட்டியெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தாமலே (Liver Biopsy) ஈரலின் விரிவடையும் தன்மையை (Elasticity) கண்டறிந்து அதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதோடு (இதை வெளிநோயாளி பிரிவிலே எளிதில் செய்ய முடியும். மருத்துவமனை அனுமதி தேவையில்லை) எப்போது பிரச்னைகள் அதிகம் வரும் (ஈரல் செயலிழப்பு) என்பதையும் முன்கூட்டியே கண்டறிய முடியும்.

குறிப்பாக இந்நோய் ஏற்படுவதற்கு,

தேவையான உடலுழைப்பு இல்லாமை

உணவுத் தேர்வில் தவறு செய்து அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுவது

உடல் பருமன்

சர்க்கரை நோய் தாக்கம்

சாராயம் (Alcohol)

போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளதால்,

ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தடுக்க,

சரியான மற்றும் தேவையான உடற்பயிற்சி,

உணவில் தேவையற்று அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல்

உடல் பருமனைக் குறைக்க அதிக நார்சத்துள்ள பழங்கள் மற்றும் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்

விலங்கு கொழுப்பை கணிசமாகக் குறைத்தல்

போன்றவை பெருமளவு உதவும் என்பதை மக்கள் புரிந்துகொண்டு, அதை கடைப்பிடித்தால்,

ஈரலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தடுத்து நலமுடன் வாழ முடியும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

🔻 🔻 🔻