Search

தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு...விண்ணப்பம் செய்வது எப்படி?

 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு,  பாதுகாப்பு ( Juvenile Justice - Care and Protection of Children Act ) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு (Juvenile Justice Board) சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு குழந்தைகள் நலன் துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:  குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்: மதிப்பூதிய அடிப்படையில் (honorarium basis) நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் இந்த பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (மார்ச் 26ம் தேதி வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை.எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,சென்னை 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


எல்லைப் பாதுகாப்புப் படையில் 80+ காலியிடங்கள் – Diploma / ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group A / B / C பிரிவுகளின் கீழ்வரும் Assistant Aircraft Mechanic, Assistant Radio Mechanic, Constable, SI, HC ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 82 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.எல்லைப் பாதுகாப்புப் படை காலியிடங்கள்:

BSF Air Wing (Group A):

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub Inspector) – 08 பணியிடங்கள்
  • Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – 11 பணியிடங்கள்
  • Constable (Storeman) – 03 பணியிடங்கள்

BSF Engineering (Group B):

  • SI (Works) – 13 பணியிடங்கள்
  • SI / JE (Elect) – 09 பணியிடங்கள்

BSF Engineering (Group C):

  • HC (Plumber) – 01 பணியிடம்
  • HC (Carpenter) – 01 பணியிடம்
  • Constable (Generator Operator) – 13 பணியிடங்கள்
  • Constable (Generator Mechanic) – 14 பணியிடங்கள்
  • Constable (Lineman) -09 பணியிடங்கள்

BSF கல்வி:

இந்த BSF சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


BSF வயது:

15.04.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub Inspector) – அதிகபட்சம் 28 வயது
  • Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – அதிகபட்சம் 28 வயது
  • Constable – 18 வயது முதல் 25 வயது வரை
  • Sub Inspector – அதிகபட்சம் 30 வயது
  • SI / JE – அதிகபட்சம் 28 வயது
  • Head Constable – 18 வயது முதல் 25 வயது வரை

BSF மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பதவிக்கு ஏற்ப ரூ.21,700/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BSF தேர்வு செய்யும் விதம்:

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BSF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த எல்லைப் பாதுகாப்புப் படை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 15.04.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

 General Manager, Addl. General Manager, Sr. Dy. General Manager, Dy. General Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NCRTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager, Addl. General Manager, Sr. Dy. General Manager, Dy. General Manager பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / MCA / தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.NCRTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

General Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TN TRB SGT தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – தேர்வு வாரியம் அறிவிப்பு!

 ஆசிரியர் தேர்வு வாரியம் 2024ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழக கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) வாயிலாக 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் TN TRB SGT 2024 என்னும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதில் கூறப்பட்டு இருந்தது. இத்தகைய தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க 15.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இக்கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் பல விண்ணப்பதாரர்கள் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கைக்கு இணங்க ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.trb.tn.gov.in/ -ல் புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின் படி, விண்ணப்பிக்க மார்ச் 15 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தம்  செய்ய 21.03.2024 அன்று முதல் 23.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed முடித்த நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIT மெட்ராஸ் Junior Executive வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.18,000/- || தேர்வு கிடையாது!

 தமிழ்நாட்டில் உள்ள Junior Executive பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள்  காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25/03/2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

Junior Executive பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள்  காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில்  Gradudate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Junior  Executive பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 25/03/2024 வரை விண்ணப்பிக்கலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ITI முடித்தவர்களுக்கு வேலை – 550 காலியிடங்கள்!

 ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 11.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. Technical Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ரயில் பெட்டித் தொழிற்சாலை பணியிடங்கள்:

Technical Apprentices பணிக்கென 550 பணியிடங்கள் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (RCF) காலியாக உள்ளது.

Technical Apprentices கல்வி விவரம்:

இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு + பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Technical Apprentices வயது விவரம்:

Technical Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 31.03.2024 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Technical Apprentices சம்பள விவரம்:

இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Apprentices விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

RCF தேர்வு செய்யும் முறை:

Technical Apprentices பணிக்கு பொருத்தமான நபர்கள் Merit List என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RCF விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.100/-

RCF விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 09.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் Developer ஆக பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க!

 


Wipro நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Developer பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.Wipro காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Developer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Developer கல்வி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் Developer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியவர்கள் என கருதப்படுகிறது.

Wipro பணியமர்த்தப்படும் இடம்:

Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Developer தேர்வு செய்யும் விதம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

 தனியார் துறையில் முன்னணி வகிக்கும் TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Process Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Process Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Process Specialist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Business Studies அல்லது ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Process Specialist முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 03 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Process Specialist தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.03.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது Faculty , Attender மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

INDSETI காலிப்பணியிடங்கள்:

Faculty, Attender மற்றும் Office Assistant பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ Post Graduate/ MSW/MA/B.Sc/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Download Application Form

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.85000/- ஊதியம் || தேர்வு கிடையாது!

 மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), Retainer Doctor பணியிடங்களை நிரப்ப இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள்  காலியாக உள்ளன. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் 22/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Retainer Doctor பதவிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள்  காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட MCI/SMC இலிருந்து குறைந்தபட்சம் ஒரு வருட இன்டர்ன்ஷிப் மற்றும் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழுடன் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27/03/2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IDBI வங்கியில் Security Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Chief Information Security Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Information Security Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s or Bachelor’s degree in engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 45 வயது பூர்த்தியான 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IDBI வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் Preliminary screening மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் rec.experts@idbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.03.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification 2024 Pdf

தமிழ் தகுதி தேர்வு புத்தகம் – 1600 முக்கிய வினா விடைகள் [PDF DOWNLOAD]

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ் திறனறித் தேர்வு வினா வங்கி – 6 முதல் 10 வகுப்பு வரை [PDF DOWNLOAD]

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

  1. வகுப்பு வாரியான வினாத்தாள் (6 முதல் 10 ஆம் வகுப்பு வரை)
  2. பகுதி வாரியான வினாத்தாள் (செய்யுள், உரைநடை, இலக்கணம்)
  3. திருப்புதல் வினாத்தாள் (முழுப் பாடத்திட்டம்)

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Repeated Q & A Tamil 6 -12 PDF

 TNPSC Repeated Q & A Tamil 6 -12 PDF

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing TN Government exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news